சௌமிய சாகரம்
36
கலங்கிநின்ற லோகமதுக் குறுதி யாகக்
கருணையுள்ளவிஷ்ணுமுனி கருத்து வைத்து
இலங்கிநின்ற யெட்டுரெண்டு மொன்றாய்க் கூடி
யேகமென்ற அஞ்செழுத்தால் பேத மாக்கித்
துலங்கிநின்ற மனுவையொரு நான்கு சாதி
சுத்தமுடன் றான்வகுத்துச்சுயமாய் மைந்தா
விளங்கிநின்ற சத்திரிய வங்கி சத்தில்
விபரமுள்ள நாகமுனி விபரங் கேளே. 132
கேளடா நாகமுனி யுலகோர்க் கையா
கிருபையுடன் பாசைபதி னெட்டுஞ் சொன்னான்
வாளடாராசமுனி தர்க்க சாஸ்திரங்
மகத்தான வேதாந்தஞ்சிப்பி சாஸ்திரங்
காலடாதானறிய மதன சாஸ்திரங்
கலந்தமனு போகமதாய் நன்மை தீமை
ஆளடா அறுசுவையும் அமுர்தங் காட்டி
அங்கமுடன் அன்னமதால் அசந்தார் தானே. 133
தானென்ற அன்னமதால் நித்திரையு முண்டாய்
சங்கையுடனனுபோகமூப் பிளமை யுண்டாய்
வானென்ற யேக்கமுட ஆசை யுண்டாய்
வஞ்சகமும் பிறப்பிறப்புத்தானு முண்டாய்த்
தேனென்ற பலகோவில் நதிக ளுண்டாய்ச்
செகராச மகுடபதி வற்க முண்டாய்க்
கோனென்ற வொப்பனைகள் நன்றாய்ச் செய்து
குறிப்புடனேதான்மூழ்கித் தவஞ்செய்தார் பாரே. 134
பாரான மறையோர்கள் வேள்வி செய்யப்
பதிவாக விஷ்ணுமுனி வந்து தோன்றிச்
சீராக வரங்கேளு மென்று சொன்னார்
செகத்திலரு சுருதிமறை யாக வேதான்
நேராக நாள்முகிழ்த்தம் நினைவாய்ச் சொல்ல
நீதியுடன் எங்கள் சொல் மேல தாகப்
பேராக அந்தரத்தில் யாருங் காணார்
பெருமையுள்ள செந்திருஷம் பேசுங் காணே. 135
36
கலங்கிநின்ற
லோகமதுக்
குறுதி
யாகக்
கருணையுள்ளவிஷ்ணுமுனி
கருத்து
வைத்து
இலங்கிநின்ற
யெட்டுரெண்டு
மொன்றாய்க்
கூடி
யேகமென்ற
அஞ்செழுத்தால்
பேத
மாக்கித்
துலங்கிநின்ற
மனுவையொரு
நான்கு
சாதி
சுத்தமுடன்
றான்வகுத்துச்சுயமாய்
மைந்தா
விளங்கிநின்ற
சத்திரிய
வங்கி
சத்தில்
விபரமுள்ள
நாகமுனி
விபரங்
கேளே
.
132
கேளடா
நாகமுனி
யுலகோர்க்
கையா
கிருபையுடன்
பாசைபதி
னெட்டுஞ்
சொன்னான்
வாளடாராசமுனி
தர்க்க
சாஸ்திரங்
மகத்தான
வேதாந்தஞ்சிப்பி
சாஸ்திரங்
காலடாதானறிய
மதன
சாஸ்திரங்
கலந்தமனு
போகமதாய்
நன்மை
தீமை
ஆளடா
அறுசுவையும்
அமுர்தங்
காட்டி
அங்கமுடன்
அன்னமதால்
அசந்தார்
தானே
.
133
தானென்ற
அன்னமதால்
நித்திரையு
முண்டாய்
சங்கையுடனனுபோகமூப்
பிளமை
யுண்டாய்
வானென்ற
யேக்கமுட
ஆசை
யுண்டாய்
வஞ்சகமும்
பிறப்பிறப்புத்தானு
முண்டாய்த்
தேனென்ற
பலகோவில்
நதிக
ளுண்டாய்ச்
செகராச
மகுடபதி
வற்க
முண்டாய்க்
கோனென்ற
வொப்பனைகள்
நன்றாய்ச்
செய்து
குறிப்புடனேதான்மூழ்கித்
தவஞ்செய்தார்
பாரே
.
134
பாரான
மறையோர்கள்
வேள்வி
செய்யப்
பதிவாக
விஷ்ணுமுனி
வந்து
தோன்றிச்
சீராக
வரங்கேளு
மென்று
சொன்னார்
செகத்திலரு
சுருதிமறை
யாக
வேதான்
நேராக
நாள்முகிழ்த்தம்
நினைவாய்ச்
சொல்ல
நீதியுடன்
எங்கள்
சொல்
மேல
தாகப்
பேராக
அந்தரத்தில்
யாருங்
காணார்
பெருமையுள்ள
செந்திருஷம்
பேசுங்
காணே
.
135