சௌமிய சாகரம்
35
பாரான மயேஸ்பரன்தானுருத்திரற் கீந்தார்
பதிவான ருத்திரனு மாலுக் கீந்தார்
நேரான மாலவனு மயனுக் கீந்தார்
நிசமான அயனாரு நிலையைப் பெற்றுப்
பேரான கருணையினால் மனுப்படைக்கப்
பெருமையுடன் ஆதியந்த நடுவின் நின்று
மாறாத காலறிந்து மவுனங் கொண்டு
மனுப்படைக்க நினைத்து நின்றார் அயனார்தானே.
அயன்முதற்கொண் டைவருடலுயிராஞ் சத்தி
ஆதியந்தஞ் சிவனாரு முயிர்க்குயிராய் நின்றார்
தயவுபெற யெடுத்தவுரு ஆண்பெண் கோடி
சங்கையில்லா மூப்பிளமை சாக்காடின்றிச்
செயம்பெறவே யொருகோடி காலம் வாழ்ந்து
தீர்க்கமுடனிருக்கையிலே மைந்தா கேளு
நயம்பெறவே சிவனுமையை நோக்கி மைந்தா
நமைவணங்க அனுக்கிரகஞ் செய்யென்றாரே. 129
செய்யென்று சொன்னமொழி யுமையுங் கேட்டுச்
சிந்தைமனதொன்றாச் சிவனை நோக்கி
மெய்யென்று சித்துவகை தானுண்டாக்கி
மேதினியிலிருப்பவர்கள் மேன்மை யாக
மையென்ற திருமால்தான் மேகந்தன்னை
மார்க்கமுட நினைக்கையிலே மைந்தா கேளு
பையென்ற முகிலதனாலமுர்த முண்டாய்ப்
பார்தனிலே சகலவித்தும் பதிவதாச்சே. 130
ஆச்சப்பா செந்நெல்பதி னெட்டு வித்தும்
அப்போதே யுண்டாச்சு அதின்மேல் மைந்தா
நீச்சப்பா அன்னமது சுவையைக் கண்டு
நிசமாகு மனுநீதி நேர்மையாகப்
பேச்சப்பாசகலசித்துந்தானுண்டாச்சு
பெருகிநின்ற ஆசைவெகு நேச மாச்சு
மூச்சப்பா வாசியது முன்பின்னாச்சு
முழங்கிநின்ற செகமதுவுங் கலங்க லாச்சே. 131
* அடிப்படைச்சுவடியில் “சிவக்க” என்று உள்ளது.
35
பாரான
மயேஸ்பரன்தானுருத்திரற்
கீந்தார்
பதிவான
ருத்திரனு
மாலுக்
கீந்தார்
நேரான
மாலவனு
மயனுக்
கீந்தார்
நிசமான
அயனாரு
நிலையைப்
பெற்றுப்
பேரான
கருணையினால்
மனுப்படைக்கப்
பெருமையுடன்
ஆதியந்த
நடுவின்
நின்று
மாறாத
காலறிந்து
மவுனங்
கொண்டு
மனுப்படைக்க
நினைத்து
நின்றார்
அயனார்தானே
.
அயன்முதற்கொண்
டைவருடலுயிராஞ்
சத்தி
ஆதியந்தஞ்
சிவனாரு
முயிர்க்குயிராய்
நின்றார்
தயவுபெற
யெடுத்தவுரு
ஆண்பெண்
கோடி
சங்கையில்லா
மூப்பிளமை
சாக்காடின்றிச்
செயம்பெறவே
யொருகோடி
காலம்
வாழ்ந்து
தீர்க்கமுடனிருக்கையிலே
மைந்தா
கேளு
நயம்பெறவே
சிவனுமையை
நோக்கி
மைந்தா
நமைவணங்க
அனுக்கிரகஞ்
செய்யென்றாரே
.
129
செய்யென்று
சொன்னமொழி
யுமையுங்
கேட்டுச்
சிந்தைமனதொன்றாச்
சிவனை
நோக்கி
மெய்யென்று
சித்துவகை
தானுண்டாக்கி
மேதினியிலிருப்பவர்கள்
மேன்மை
யாக
மையென்ற
திருமால்தான்
மேகந்தன்னை
மார்க்கமுட
நினைக்கையிலே
மைந்தா
கேளு
பையென்ற
முகிலதனாலமுர்த
முண்டாய்ப்
பார்தனிலே
சகலவித்தும்
பதிவதாச்சே
.
130
ஆச்சப்பா
செந்நெல்பதி
னெட்டு
வித்தும்
அப்போதே
யுண்டாச்சு
அதின்மேல்
மைந்தா
நீச்சப்பா
அன்னமது
சுவையைக்
கண்டு
நிசமாகு
மனுநீதி
நேர்மையாகப்
பேச்சப்பாசகலசித்துந்தானுண்டாச்சு
பெருகிநின்ற
ஆசைவெகு
நேச
மாச்சு
மூச்சப்பா
வாசியது
முன்பின்னாச்சு
முழங்கிநின்ற
செகமதுவுங்
கலங்க
லாச்சே
.
131
*
அடிப்படைச்சுவடியில்
“
சிவக்க
”
என்று
உள்ளது
.