நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான்உரையும் சிறப்புப் பாயிரம் மலர்தலை யுலகின் மல்கிரு ளகல இலகொளி பரப்பி யாவையும் விளக்கும் பரிதியி னொருதா னாகி முதலீ றொப்பள வாசை முனிவிகந் துயர்ந்த அற்புத மூர்த்திதன் னலர்தரு தன்மையின் மனவிரு ளிரிய மாண்பொருண் முழுவதும் முனிவற வருளிய மூவறு மொழியுளும் குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையி னிருந்தமிழ்க் கடலின் அரும்பொரு ளைந்தையும் யாவரு முணரத் தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார் இகலற நூறி யிருநில முழுவதும் தனதெனக் கோலித் தன்மத வாரணம் திசைதொறு நிறுவிய திறலுறு தொல்சீர்க் கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் திருந்திய செங்கோற் சீய கங்கன் அருங்கலை வினோத னமரா பரணன் மொழிந்தன னாக முன்னோர் நூலின் வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன் பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி என்னு நாமத் திருந்தவத் தோனே. சூத்திரம், இஃது தமிழினது தன்மையும் இந்நூற்குச் சிறப்புப் பாயிர மும் கூறியது.
நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான்உரையும் சிறப்புப் பாயிரம் மலர்தலை யுலகின் மல்கிரு ளகல இலகொளி பரப்பி யாவையும் விளக்கும் பரிதியி னொருதா னாகி முதலீ றொப்பள வாசை முனிவிகந் துயர்ந்த அற்புத மூர்த்திதன் னலர்தரு தன்மையின் மனவிரு ளிரிய மாண்பொருண் முழுவதும் முனிவற வருளிய மூவறு மொழியுளும் குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையி னிருந்தமிழ்க் கடலின் அரும்பொரு ளைந்தையும் யாவரு முணரத் தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார் இகலற நூறி யிருநில முழுவதும் தனதெனக் கோலித் தன்மத வாரணம் திசைதொறு நிறுவிய திறலுறு தொல்சீர்க் கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் திருந்திய செங்கோற் சீய கங்கன் அருங்கலை வினோத னமரா பரணன் மொழிந்தன னாக முன்னோர் நூலின் வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன் பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி என்னு நாமத் திருந்தவத் தோனே . சூத்திரம் இஃது தமிழினது தன்மையும் இந்நூற்குச் சிறப்புப் பாயிர மும் கூறியது .