அபிதான சிந்தாமணி

கேட்டேன். அவர்கள் இது தொடர்ந்த கதையாயின் வாங்கலாமெனவும், சிலர் முற்றுறப் பலநாள் பிடிக்கும் எனவும், சிலர் கையொப்பமிட்டுஞ் சென்றனர். இச் சோர்வால் எனக்கு அக்கார்யத்தில் ஊக்கஞ்செல்லாது எலைப் புற்றிடுவோமா என எண்ணினேன். இதற்குள் சிலர் இதனையொத்த சிறு நூல்களியற்றினர். அதனைக் கண்டும் திருவுளப்பாங் கென்றிருந்தேன். இது நிற்க, நான் வழிபடு கடவுளாகிய மலை மகணாயகர் உள்ளக் குறிப்போ , அல்லது நான் முதன் முறை வெளியிட்ட அறிக்கைப் பத்திரிகையோ, அல்லது இரண்டாமுறை வெளிப்படுத்திய அறிக்கையோ, மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பிரசிடெண்டும் பாலவனத்தம் ஆமீன் தார் அவர்களும், தமிழ் வளர்த்த ஸ்ரீமான் பொன்னுசாமி தேவரவர்களின் திருக்குமாரரும், என் தளர்ச்சிக்கள் ஊன்றுகோல் போல்பவருமாகிய ஸ்ரீமான் பொ. பாண்டித்துரைசாமித் தேவரவர் களின் கைப்பட்டுத் தாமே சென்னைக்கு வந்து நான் எழுதிய நூலைக் கண்டு களித்து அதனை மதுரைத் தமிழ்ச் சங்க அச்சுயந்திரசாலையில் அச்சிடுவான் எண்ணி என்னிட மிருந்த பிரதிகளைத் தாமே மதுரைக்கு எடுத்துச்சென்று அவ்விடத்தில் நாம் எழுதிய அனைத்தையும் பலரைக்கொண்டு சுத்தமாய் எழுதுவித்து மீண்டுமவற்றைச் சென்னையி லுள்ள அச்சுயந்திரசாலையில் என் முன்னிலையில் அச்சிட, வுத்தரவளித்து அப் போதைக்கப்போது பொருளுதவி செய்து வந்தனர். அவர்கள் அருஞ்செயலை இப் புத்தகத்தை நோக்கும் அறிவாளிகள் புகழாமற் போகார். இந்நூல் ஒரு தனி நூலன்று, இது பல சான்றோரியற்றிய நூல்களின் தொகுப் பாம். இதனை எழுதுமிடத்து எனக்குச் சென்னை பிரசிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டி தரும் மஹாமஹோ பாத்யாயருமாகிய பிரம்மஸ்ரீ வெ. சாமிநாத ஐயரவர்கள் வெளிப்படுத்திய சங்கச் செய்யுட்கள் எனக்கு தவிய வாதலால் அவர்களுக்கும், மது ரைச் செந்தமிழ் வாயிலாக வெளிவந்த பல அரிய விஷயங்கள் எனக்கு உதவிய வாகையால் அப்பத்திராசிரியருக்கும், பல நூல்களிலிருந்தும் பல அரிய விஷயங் களைத் திரட்டினேனாதலால் அந்நூலாசிரியர்களுக்கும், இந்நூற்கு வேண்டிய புத்த கங்களை நான் கேட்கும்போது நோவாது உதவிய பண்டிதர்களுக்கும், எனக்குச் சமண சீர்த்தங்கரரின் சரிதைகளைத் தம் வேலைவிட்டு அருகிருந்து விளக்கிய வீடூர் வித்வான் ம-----ஸ்ரீ, அப்பாசாமி நயினாருக்கும், இதில் நான் தவறிய விஷயங்களைப் பெரு நூலென்று பொறுத்துத் திருத்திக்கொள்ளும் பொறையாளர்க்கும் நான் பன் முறை வந்தனம் புரியக் கடமைப்பட்டவ னாகிறேன். இந்நூல் என்னை எழுதும் வகைத் தூண்டி யென்முயற்சியிலாது அதனை முற்றுறச் செய்வித்த முக்கண்மூர்த்தி மூவாமுதல்வன் செக்கர்மேனிச் சிவனடி யென்றும் பாசி படர்ந்த குட்ட நிகர்த்த ஆசுடை மனத்து அமர்ந்து வாழ்க. இங்கனம் : ஆ. சிங்காரவேலு முதலியார், கிருஷ்ணாம்பேட்டை, சென்னை.
கேட்டேன் . அவர்கள் இது தொடர்ந்த கதையாயின் வாங்கலாமெனவும் சிலர் முற்றுறப் பலநாள் பிடிக்கும் எனவும் சிலர் கையொப்பமிட்டுஞ் சென்றனர் . இச் சோர்வால் எனக்கு அக்கார்யத்தில் ஊக்கஞ்செல்லாது எலைப் புற்றிடுவோமா என எண்ணினேன் . இதற்குள் சிலர் இதனையொத்த சிறு நூல்களியற்றினர் . அதனைக் கண்டும் திருவுளப்பாங் கென்றிருந்தேன் . இது நிற்க நான் வழிபடு கடவுளாகிய மலை மகணாயகர் உள்ளக் குறிப்போ அல்லது நான் முதன் முறை வெளியிட்ட அறிக்கைப் பத்திரிகையோ அல்லது இரண்டாமுறை வெளிப்படுத்திய அறிக்கையோ மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பிரசிடெண்டும் பாலவனத்தம் ஆமீன் தார் அவர்களும் தமிழ் வளர்த்த ஸ்ரீமான் பொன்னுசாமி தேவரவர்களின் திருக்குமாரரும் என் தளர்ச்சிக்கள் ஊன்றுகோல் போல்பவருமாகிய ஸ்ரீமான் பொ . பாண்டித்துரைசாமித் தேவரவர் களின் கைப்பட்டுத் தாமே சென்னைக்கு வந்து நான் எழுதிய நூலைக் கண்டு களித்து அதனை மதுரைத் தமிழ்ச் சங்க அச்சுயந்திரசாலையில் அச்சிடுவான் எண்ணி என்னிட மிருந்த பிரதிகளைத் தாமே மதுரைக்கு எடுத்துச்சென்று அவ்விடத்தில் நாம் எழுதிய அனைத்தையும் பலரைக்கொண்டு சுத்தமாய் எழுதுவித்து மீண்டுமவற்றைச் சென்னையி லுள்ள அச்சுயந்திரசாலையில் என் முன்னிலையில் அச்சிட வுத்தரவளித்து அப் போதைக்கப்போது பொருளுதவி செய்து வந்தனர் . அவர்கள் அருஞ்செயலை இப் புத்தகத்தை நோக்கும் அறிவாளிகள் புகழாமற் போகார் . இந்நூல் ஒரு தனி நூலன்று இது பல சான்றோரியற்றிய நூல்களின் தொகுப் பாம் . இதனை எழுதுமிடத்து எனக்குச் சென்னை பிரசிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டி தரும் மஹாமஹோ பாத்யாயருமாகிய பிரம்மஸ்ரீ வெ . சாமிநாத ஐயரவர்கள் வெளிப்படுத்திய சங்கச் செய்யுட்கள் எனக்கு தவிய வாதலால் அவர்களுக்கும் மது ரைச் செந்தமிழ் வாயிலாக வெளிவந்த பல அரிய விஷயங்கள் எனக்கு உதவிய வாகையால் அப்பத்திராசிரியருக்கும் பல நூல்களிலிருந்தும் பல அரிய விஷயங் களைத் திரட்டினேனாதலால் அந்நூலாசிரியர்களுக்கும் இந்நூற்கு வேண்டிய புத்த கங்களை நான் கேட்கும்போது நோவாது உதவிய பண்டிதர்களுக்கும் எனக்குச் சமண சீர்த்தங்கரரின் சரிதைகளைத் தம் வேலைவிட்டு அருகிருந்து விளக்கிய வீடூர் வித்வான் - - - - - ஸ்ரீ அப்பாசாமி நயினாருக்கும் இதில் நான் தவறிய விஷயங்களைப் பெரு நூலென்று பொறுத்துத் திருத்திக்கொள்ளும் பொறையாளர்க்கும் நான் பன் முறை வந்தனம் புரியக் கடமைப்பட்டவ னாகிறேன் . இந்நூல் என்னை எழுதும் வகைத் தூண்டி யென்முயற்சியிலாது அதனை முற்றுறச் செய்வித்த முக்கண்மூர்த்தி மூவாமுதல்வன் செக்கர்மேனிச் சிவனடி யென்றும் பாசி படர்ந்த குட்ட நிகர்த்த ஆசுடை மனத்து அமர்ந்து வாழ்க . இங்கனம் : . சிங்காரவேலு முதலியார் கிருஷ்ணாம்பேட்டை சென்னை .