அபிதான சிந்தாமணி

கடவுள் துணை இரண்டாம் பதிப்பின் முன்னுரை தமிழ் நூலின்கண்ணே வழங்கிவரும் சிறப்புப் பெயர்களைக் குறித்தும் பழக்க வழக்கங்களைக் குறித்தும் எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சாதன மொன்றுமில்லை. திவாகரம் பிங்கலந்தை முதலிய நூல்கள் சொல்லுக்குப் பொருள் உறுவனவேயன்றி சிறப்புப் பெயர்களைக் குறிக்கவுமாட்டா, விவரிக்கவுமாட்டா. அக்குறையை நீக்க எழுந்தது அபிதான சிந்தாமணி என்னும் இந்நூல். - மதுரையின் கண்ணே நிறுவப்பட்டுள்ள தமிழ்ச் சங்கம் வாயிலாக, இற்றைக்கு இருபத்துநான்கு ஆண்கெட்கு முன்னர் 1910-ம் ஆண்டில் என தருமைத் தந்தையார் திருவாளர் . சிங்காரவேலு முதலியார் அபிதான சிந்தாமணி எனப் பெயரிய பெரியதொரு அகராதியை வெளியிட்டார்கள். அப்போது முதலே எனது தந்தையார் அந்நூலில் விடப்பட்டுப்போனதாகக் கண்டவற்றையும் பின்னும் தம் ஆராய்ச்சியில் தெரிந்தனவற்றையும் அவ்வப்போது குறித்துவந்தார்கள். முதற்பதிப்பு 1050 பக்கம் சன் கொண்டன. இந்நூலோ 1634 பக்கங்களுடையன. அதுகொண்டே இந்ரலில் வந்துள்ள புதிய சொற்களும் இது அடைந்துள்ள திருத்தங்களும் ஒருவாறு விளங்கும். இந்நூலை எனது தந்தையார் அச்சுக்குக் கொடுத்துத் தாமே ஆயிரம் பக்கம் என் வரை அச்சுத்தாள்களைத் திருத்திவந்தார்கள். பின்னர் கோய்வாய்ப்பட்டு 1931-ம் ஆண்டு நவம்பர் (பிர) சிவபெருமானது திருவடி நீழலை யடையவே, அதனை அச்சிட்டு வெளியிடும் பொறுப்பு என்னைச் சார்ந்தது. என்னுடைய உத்தியோகத் தோடு இவ் வேலையையும் செய்வது சிறிது அசாத்தியமாகவே இருந்தது. ஒரு நாள் தற்செயலாக சென்னை யூனிவர்சிட்டியைச் சார்ந்த தமிழ் லெக்ஸிகன் ஆபீசில் எனது தந்தையாருக்குப்பின் அவர் ஸ்தானத்தில் வேலைபார்த்துவரும் எனது நண்பர் இலக் கணவிளக்க ஆசிரியர் பாம்பரை திருவாரூர் சோமசுந்தா தேசிகாவர்களைச் சந்திக்க நேர்ந்தபோது அவர்களை அச்சுத்தாள்கள் திருத்துவதோடு முடியும்வரை ஆவன செய்து முடிக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். அவர்களும் ஒத்துக்கொண்டு பிற்பாகத்து அச்சுத்தாள்களைப் பார்த்தும், தன்னாலியன்ற திருத்தங்களைச் செய்ஜம் வேண்டும் உதவி புரிந்தார்கள். அவற்றின் பலனாக இந்நூல் இப்பொழுது வெளியா சின்றது. இதனை அழகுற அச்சிட்டு முடித்த சென்னை வி. குமாரசாமி காயுடு கம்பெனி யாருக்கும் திரு. சோமசுந்தா தேசிகாவர்களுக்கும் என் நன்றி உரியதாகும். திருமயிலாப்பூர் 1 சீமுகதைத்திங்கள் எ.. ஆ. சிவப்பிரகாச முதலியா, B.A., offs. Assistant Presiday Postmaster, General Post Office (Sorting), Madras
கடவுள் துணை இரண்டாம் பதிப்பின் முன்னுரை தமிழ் நூலின்கண்ணே வழங்கிவரும் சிறப்புப் பெயர்களைக் குறித்தும் பழக்க வழக்கங்களைக் குறித்தும் எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சாதன மொன்றுமில்லை . திவாகரம் பிங்கலந்தை முதலிய நூல்கள் சொல்லுக்குப் பொருள் உறுவனவேயன்றி சிறப்புப் பெயர்களைக் குறிக்கவுமாட்டா விவரிக்கவுமாட்டா . அக்குறையை நீக்க எழுந்தது அபிதான சிந்தாமணி என்னும் இந்நூல் . - மதுரையின் கண்ணே நிறுவப்பட்டுள்ள தமிழ்ச் சங்கம் வாயிலாக இற்றைக்கு இருபத்துநான்கு ஆண்கெட்கு முன்னர் 1910 - ம் ஆண்டில் என தருமைத் தந்தையார் திருவாளர் . சிங்காரவேலு முதலியார் அபிதான சிந்தாமணி எனப் பெயரிய பெரியதொரு அகராதியை வெளியிட்டார்கள் . அப்போது முதலே எனது தந்தையார் அந்நூலில் விடப்பட்டுப்போனதாகக் கண்டவற்றையும் பின்னும் தம் ஆராய்ச்சியில் தெரிந்தனவற்றையும் அவ்வப்போது குறித்துவந்தார்கள் . முதற்பதிப்பு 1050 பக்கம் சன் கொண்டன . இந்நூலோ 1634 பக்கங்களுடையன . அதுகொண்டே இந்ரலில் வந்துள்ள புதிய சொற்களும் இது அடைந்துள்ள திருத்தங்களும் ஒருவாறு விளங்கும் . இந்நூலை எனது தந்தையார் அச்சுக்குக் கொடுத்துத் தாமே ஆயிரம் பக்கம் என் வரை அச்சுத்தாள்களைத் திருத்திவந்தார்கள் . பின்னர் கோய்வாய்ப்பட்டு 1931 - ம் ஆண்டு நவம்பர் ( பிர ) சிவபெருமானது திருவடி நீழலை யடையவே அதனை அச்சிட்டு வெளியிடும் பொறுப்பு என்னைச் சார்ந்தது . என்னுடைய உத்தியோகத் தோடு இவ் வேலையையும் செய்வது சிறிது அசாத்தியமாகவே இருந்தது . ஒரு நாள் தற்செயலாக சென்னை யூனிவர்சிட்டியைச் சார்ந்த தமிழ் லெக்ஸிகன் ஆபீசில் எனது தந்தையாருக்குப்பின் அவர் ஸ்தானத்தில் வேலைபார்த்துவரும் எனது நண்பர் இலக் கணவிளக்க ஆசிரியர் பாம்பரை திருவாரூர் சோமசுந்தா தேசிகாவர்களைச் சந்திக்க நேர்ந்தபோது அவர்களை அச்சுத்தாள்கள் திருத்துவதோடு முடியும்வரை ஆவன செய்து முடிக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன் . அவர்களும் ஒத்துக்கொண்டு பிற்பாகத்து அச்சுத்தாள்களைப் பார்த்தும் தன்னாலியன்ற திருத்தங்களைச் செய்ஜம் வேண்டும் உதவி புரிந்தார்கள் . அவற்றின் பலனாக இந்நூல் இப்பொழுது வெளியா சின்றது . இதனை அழகுற அச்சிட்டு முடித்த சென்னை வி . குமாரசாமி காயுடு கம்பெனி யாருக்கும் திரு . சோமசுந்தா தேசிகாவர்களுக்கும் என் நன்றி உரியதாகும் . திருமயிலாப்பூர் 1 சீமுகதைத்திங்கள் . . . சிவப்பிரகாச முதலியா B . A . offs . Assistant Presiday Postmaster General Post Office ( Sorting ) Madras