சௌமிய சாகரம்
வைய்யப்பா கீழ்முகமாய்க் குகையில் வைத்து
மார்க்கமுடன் செங்கல்தூள் கல்உப்பு நீரு
மெய்யப்பா மூன்றுபொடி ஒன்றாய்க் கூட்டி
மேன்மைபெறக் குகைநிறைய அமிழ்த்தி வைத்துக்
கையப்பாதவறாமல் மனம்நிறுத்திக்
கருணையுடன் சதுரமாய்த் திரணை செய்து
செய்யப்பாதிரணைநடு கும்பம் வைத்துத்
தீர்க்கமுடன் மானதமாய்ப் பூசை பண்ணே . 175
பண்ணப்பாசகலரச வற்கம் வைத்துப்
பதிவான மயேசுவரியைப் பூசை செய்து
கண்ணப்பாதானோக்கி மனது கூர்ந்து
கன்னிகாதானமுடன் கோதானங்கள்
பொன்னப்பாதான்விளையும் பூதானங்கள்
புத்தியுடன் பூதிகாதானஞ் செய்து
நண்ணப்பாதன்பதியில் வந்திருந்து
நாட்டான குருபூசை நன்றாய்க் காணே. 176
காணவே குருபூசை நன்றாய்ச் செய்து
கருணைவளர் சமாதுதனிற் கடாட்சமாகப்
பூணவே நித்தியமும் பூசை செய்தால்
பூரணமாய் மூர்த்திகரம் புதுமை யாகும்
தோணவே சத்தியுட சமாது தன்னில்
துலங்கவே புதுமைகள்தான் என்ன சொல்வேன்
பேணவே பூரணமாய்ச்சமாது பூசை
பெருமைவிட்டு உரிமையதாய்ச் செய்து பாரே. 177
பாரடா ஆண்ரூபமுனிதானாச்சு
பதிவான பெண்ரூப முனிதானாச்சு
காரடா ரிஷிமுனிவர் கருணை தன்னைக்
கருணையுடன் கண்டறிந்து பூசை செய்து
ஆரடா அறிவார்கள் ஆதியந்தம்
அரகரா ஆதியந்தம் ஆண்பெண்ணாச்சு
நேரடா ஆண்பெண்ணா நினைந்தாலென்ன
நேர்மையுட லறிவல்லோசாட்சி தானே. 178
தெ
வைய்யப்பா
கீழ்முகமாய்க்
குகையில்
வைத்து
மார்க்கமுடன்
செங்கல்தூள்
கல்உப்பு
நீரு
மெய்யப்பா
மூன்றுபொடி
ஒன்றாய்க்
கூட்டி
மேன்மைபெறக்
குகைநிறைய
அமிழ்த்தி
வைத்துக்
கையப்பாதவறாமல்
மனம்நிறுத்திக்
கருணையுடன்
சதுரமாய்த்
திரணை
செய்து
செய்யப்பாதிரணைநடு
கும்பம்
வைத்துத்
தீர்க்கமுடன்
மானதமாய்ப்
பூசை
பண்ணே
.
175
பண்ணப்பாசகலரச
வற்கம்
வைத்துப்
பதிவான
மயேசுவரியைப்
பூசை
செய்து
கண்ணப்பாதானோக்கி
மனது
கூர்ந்து
கன்னிகாதானமுடன்
கோதானங்கள்
பொன்னப்பாதான்விளையும்
பூதானங்கள்
புத்தியுடன்
பூதிகாதானஞ்
செய்து
நண்ணப்பாதன்பதியில்
வந்திருந்து
நாட்டான
குருபூசை
நன்றாய்க்
காணே
.
176
காணவே
குருபூசை
நன்றாய்ச்
செய்து
கருணைவளர்
சமாதுதனிற்
கடாட்சமாகப்
பூணவே
நித்தியமும்
பூசை
செய்தால்
பூரணமாய்
மூர்த்திகரம்
புதுமை
யாகும்
தோணவே
சத்தியுட
சமாது
தன்னில்
துலங்கவே
புதுமைகள்தான்
என்ன
சொல்வேன்
பேணவே
பூரணமாய்ச்சமாது
பூசை
பெருமைவிட்டு
உரிமையதாய்ச்
செய்து
பாரே
.
177
பாரடா
ஆண்ரூபமுனிதானாச்சு
பதிவான
பெண்ரூப
முனிதானாச்சு
காரடா
ரிஷிமுனிவர்
கருணை
தன்னைக்
கருணையுடன்
கண்டறிந்து
பூசை
செய்து
ஆரடா
அறிவார்கள்
ஆதியந்தம்
அரகரா
ஆதியந்தம்
ஆண்பெண்ணாச்சு
நேரடா
ஆண்பெண்ணா
நினைந்தாலென்ன
நேர்மையுட
லறிவல்லோசாட்சி
தானே
.
178
தெ