சௌமிய சாகரம்
297
சுத்தமுடன் நின்றுவிளைய யாடு தற்குத்
தொடுகுறிபோல் இன்னமொரு சூட்சஞ் சொல்வேன்
பத்தமுடன் ஏகாந்த சித்த மாகிப்
பரமகயிலாசகுரு பாதம் போற்றிப்
புத்தியுடன் நின்றுதிரு வாசி யேறிப்
பூரணமாஞ் சுழுனையிலே மனக்கண் சாத்திச்
சத்தமுடன் ஒங்கார விசையினாலே
சரியையிலே நின்றுமனந் தாங்கி நில்லே. 1121
நில்லடா சரியையிலே நின்று தேறி
நிசமான கிரியையிலே தேர்ந்து கொண்டு
உள்ளடா உடலறிந்து யோகம் பண்ணு
உண்மையென்ற யோகமதி லுறுதி யானால்
செல்லடா ஞானமென்ற நிலையில் நின்று
திருவான பூரணத்தைக் கண்டு கொண்டு
சொல்லடா சொல் நிறைந்த மவுனத் தேகிச்
சுகமறிந்து சூட்சநிலை கண்டு கொள்ளே. 1122
கண்டதொரு நாலுக்கும் பகையே தென்றால்
கசடானகாமியமாஞ் சித்தத்தாலே
விண்டதொரு பிராரத்வகர்மத்தாலே
விளங்கிநின்ற நாலுக்கும் விக்கினங்க ளாச்சே
கொண்டதொரு நாலுதனைச் சொல்லக் கேளு
கொடிதான வறுமையொடு கிலேசந் தீரும்
சென்றதொரு பெண்ணாசை மண்பொன்னாசை
செகத்திலுள்ளோர் தான்மயங்கித் தியங்கு வாரே.1123
தியங்கினால் வாசியது மயங்கிப் போகும்
திறமறியா மானிடர்கள் செகத்தினுள்ளே
மயங்கினார் மாய்கையிலே மகிழ்ந்து கொண்டு
மாசற்ற சோதியிலே மனஞ்செல்லாமல்
தயங்குகின்ற காமவலைக் குள்ளே சென்று
தன்னிலையைத் தானறிய மாட்டாமல்தான்
மயங்கியதோர் மயக்கத்தால் ஞானம் போச்சு
மகத்தான அறிவதும் மாண்டு போச்சு.
1124
297
சுத்தமுடன்
நின்றுவிளைய
யாடு
தற்குத்
தொடுகுறிபோல்
இன்னமொரு
சூட்சஞ்
சொல்வேன்
பத்தமுடன்
ஏகாந்த
சித்த
மாகிப்
பரமகயிலாசகுரு
பாதம்
போற்றிப்
புத்தியுடன்
நின்றுதிரு
வாசி
யேறிப்
பூரணமாஞ்
சுழுனையிலே
மனக்கண்
சாத்திச்
சத்தமுடன்
ஒங்கார
விசையினாலே
சரியையிலே
நின்றுமனந்
தாங்கி
நில்லே
.
1121
நில்லடா
சரியையிலே
நின்று
தேறி
நிசமான
கிரியையிலே
தேர்ந்து
கொண்டு
உள்ளடா
உடலறிந்து
யோகம்
பண்ணு
உண்மையென்ற
யோகமதி
லுறுதி
யானால்
செல்லடா
ஞானமென்ற
நிலையில்
நின்று
திருவான
பூரணத்தைக்
கண்டு
கொண்டு
சொல்லடா
சொல்
நிறைந்த
மவுனத்
தேகிச்
சுகமறிந்து
சூட்சநிலை
கண்டு
கொள்ளே
.
1122
கண்டதொரு
நாலுக்கும்
பகையே
தென்றால்
கசடானகாமியமாஞ்
சித்தத்தாலே
விண்டதொரு
பிராரத்வகர்மத்தாலே
விளங்கிநின்ற
நாலுக்கும்
விக்கினங்க
ளாச்சே
கொண்டதொரு
நாலுதனைச்
சொல்லக்
கேளு
கொடிதான
வறுமையொடு
கிலேசந்
தீரும்
சென்றதொரு
பெண்ணாசை
மண்பொன்னாசை
செகத்திலுள்ளோர்
தான்மயங்கித்
தியங்கு
வாரே
.
1123
தியங்கினால்
வாசியது
மயங்கிப்
போகும்
திறமறியா
மானிடர்கள்
செகத்தினுள்ளே
மயங்கினார்
மாய்கையிலே
மகிழ்ந்து
கொண்டு
மாசற்ற
சோதியிலே
மனஞ்செல்லாமல்
தயங்குகின்ற
காமவலைக்
குள்ளே
சென்று
தன்னிலையைத்
தானறிய
மாட்டாமல்தான்
மயங்கியதோர்
மயக்கத்தால்
ஞானம்
போச்சு
மகத்தான
அறிவதும்
மாண்டு
போச்சு
.
1124