சௌமிய சாகரம்

214 யோகத்துக்காசனம் தேசிபர தேசிவிசுவாசியான சிவசிவா மவுனகுரு நாத னாவான் வாசிவல சாரியிட சாரி செய்வான் வணக்கமுடன் செகந்தனிலே வாழ்ந்து கொள்வான் நாசிமுனையறிந்துமணி நாவசைத்து நாட்டமுடன் வாசிவா ஓமென்றூணி நேசமுடன் சரியைவழி நடந்தாயாகில் நிசமானஞானமது இழுக்கும் பாரே. 813 இழுக்குமடா சரியைவழி யொடுகிரியை ரெண்டும் இதுவறிந்து யோகத்துக்கடிதான்மைந்தா தெளிக்குமடா கோமுக ஆசனத்தைக் கேளு சிறக்கரெண்டு முழங்காலையொன்றாய்ச் சேர்த்துக் களிக்குமடா குதியொன்றில் பானங் கார்க்கக் கசடறவே நோக்கிமேல் மூலம் பாரு நெளிக்குமடா நாவினுனி சுழுனை மேலே நேர்மையுடன் அங்கென்று நின்று ஊணே. 814 ஊணியே வாசிதனிலேறிப் பார்க்க உத்தமனே ரவிபோலே ஒளிதான் வீசும் பேணியே சிவயோகம் ஆர்தான் செய்வார்? பெரியோர்கள் சொல்லார்கள் அரிதரி தென்பார் தோணியே பார்ப்பதற்கிந்நூலைப் பாரு சுகமாக யீராறு தலமேற் சென்று ஆணியாய் மூன்றெழுத்து மொன்றாய் நின்ற (து) அறியார்க ளசைபைமுதல் அறிவாங் கண்ணே . 814 கண்ணறியார் மூக்கறியார்காதும் கேளார் கருத்துவைத்துச்சுழுமுனையிலே மனத்தை யூணார் விண்ணேறிக் கேசரியைப் பெற்றோரில்லை வேதாந்தம் வாய்ப்பேச்சால்க்ைகுள் ளாமே ஒண்ணறியாமனத்தையங்கே யூணிக் காண உத்தமனே மூதண்ட ஒடுக்கஞ் சென்று நண்ணறிவால் நாதவிந்து குளிகை செய்து நாதமென்ற வாசிவல நாடினேனே. 816
214 யோகத்துக்காசனம் தேசிபர தேசிவிசுவாசியான சிவசிவா மவுனகுரு நாத னாவான் வாசிவல சாரியிட சாரி செய்வான் வணக்கமுடன் செகந்தனிலே வாழ்ந்து கொள்வான் நாசிமுனையறிந்துமணி நாவசைத்து நாட்டமுடன் வாசிவா ஓமென்றூணி நேசமுடன் சரியைவழி நடந்தாயாகில் நிசமானஞானமது இழுக்கும் பாரே . 813 இழுக்குமடா சரியைவழி யொடுகிரியை ரெண்டும் இதுவறிந்து யோகத்துக்கடிதான்மைந்தா தெளிக்குமடா கோமுக ஆசனத்தைக் கேளு சிறக்கரெண்டு முழங்காலையொன்றாய்ச் சேர்த்துக் களிக்குமடா குதியொன்றில் பானங் கார்க்கக் கசடறவே நோக்கிமேல் மூலம் பாரு நெளிக்குமடா நாவினுனி சுழுனை மேலே நேர்மையுடன் அங்கென்று நின்று ஊணே . 814 ஊணியே வாசிதனிலேறிப் பார்க்க உத்தமனே ரவிபோலே ஒளிதான் வீசும் பேணியே சிவயோகம் ஆர்தான் செய்வார் ? பெரியோர்கள் சொல்லார்கள் அரிதரி தென்பார் தோணியே பார்ப்பதற்கிந்நூலைப் பாரு சுகமாக யீராறு தலமேற் சென்று ஆணியாய் மூன்றெழுத்து மொன்றாய் நின்ற ( து ) அறியார்க ளசைபைமுதல் அறிவாங் கண்ணே . 814 கண்ணறியார் மூக்கறியார்காதும் கேளார் கருத்துவைத்துச்சுழுமுனையிலே மனத்தை யூணார் விண்ணேறிக் கேசரியைப் பெற்றோரில்லை வேதாந்தம் வாய்ப்பேச்சால்க்ைகுள் ளாமே ஒண்ணறியாமனத்தையங்கே யூணிக் காண உத்தமனே மூதண்ட ஒடுக்கஞ் சென்று நண்ணறிவால் நாதவிந்து குளிகை செய்து நாதமென்ற வாசிவல நாடினேனே . 816