சௌமிய சாகரம்
112
செயலான செயலறிந்து செயலைக் காணத்
திரமான தீர்க்கமொன்று செப்பக் கேளு
மயலான மயல்கருத்து மவுனங் கொண்டு
மகத்தான கேசரியாமண்டத் தேகிச்
சுயமான பூரணமாஞ் சோதித் தாயைச்
சுத்தமுடன் தான்வணங்கித் தொழுது போத்தி
நயமாக வைத்துரிமை செய்து கொண்டு
நாதாந்தப் பூரணத்தை நயமாய் வாங்கே. 423
வாங்கியந்தப் பூரணத்தை மைந்தா நீயும்
வணக்கமுடன் பீங்கானில் வைத்துப் போற்றிப்
பாங்குபெற ரவிபீசம் அறிவாய்ச் சேர்த்துப்
பதமாக மத்தித்து ரவியில் வைத்துச்
சாங்கமாய்க் காய்ந்தபின்பு எடுத்துப் பாரு
சதாசிவத்தின் செயலதனால் மெழுகாய்ப் போகும்
பூங்கமல அமுர்தரசமெழுகை வாங்கிப்
புத்தியுடன் சத்திசிவ வாலை சேரே. 424
சேரப்பா அஞ்சையுமே ஒன்றாய்ச் சேர்த்துத்
திறமாக மத்தித்து ரவியில் போடு
சாரப்பா இன்னமொரு கருமானங்கேள்
சத்தியுப்பு தன்னுடனே வீரம் பூரம்
காரப்பாகருவறிந்து சேர்த்துக் கொண்டு
கலசமதில் தானமிழ்த்தித் தயிலம் வாங்கி
நேரப்பா முன்சொன்ன அஞ்சும் போட்டு
நிசமானதைலத்தை விட்டுக் கிண்டே.
425
கிண்டிமிகத் தானெடுத்து ரவியிற் போட்டுக்
கிருபையுடன் பீங்கான்தன் தாளி சென்று
அண்டகே சரிமாது தன்னைப் போற்றி
ஆக்கைநிலை தனையறிந்து அந்தி சந்தி
குன்றிமணி யளவெடுத்துக் கொண்டாயானால்
குடிலமென்ற தீவினைகள்காணா தோடும்
எண்டிசையுங் கீர்த்தி பெற வாழ்வாயப்பா
இன்பரசகாயாதி கற்பந்தானே.
426
112
செயலான
செயலறிந்து
செயலைக்
காணத்
திரமான
தீர்க்கமொன்று
செப்பக்
கேளு
மயலான
மயல்கருத்து
மவுனங்
கொண்டு
மகத்தான
கேசரியாமண்டத்
தேகிச்
சுயமான
பூரணமாஞ்
சோதித்
தாயைச்
சுத்தமுடன்
தான்வணங்கித்
தொழுது
போத்தி
நயமாக
வைத்துரிமை
செய்து
கொண்டு
நாதாந்தப்
பூரணத்தை
நயமாய்
வாங்கே
.
423
வாங்கியந்தப்
பூரணத்தை
மைந்தா
நீயும்
வணக்கமுடன்
பீங்கானில்
வைத்துப்
போற்றிப்
பாங்குபெற
ரவிபீசம்
அறிவாய்ச்
சேர்த்துப்
பதமாக
மத்தித்து
ரவியில்
வைத்துச்
சாங்கமாய்க்
காய்ந்தபின்பு
எடுத்துப்
பாரு
சதாசிவத்தின்
செயலதனால்
மெழுகாய்ப்
போகும்
பூங்கமல
அமுர்தரசமெழுகை
வாங்கிப்
புத்தியுடன்
சத்திசிவ
வாலை
சேரே
.
424
சேரப்பா
அஞ்சையுமே
ஒன்றாய்ச்
சேர்த்துத்
திறமாக
மத்தித்து
ரவியில்
போடு
சாரப்பா
இன்னமொரு
கருமானங்கேள்
சத்தியுப்பு
தன்னுடனே
வீரம்
பூரம்
காரப்பாகருவறிந்து
சேர்த்துக்
கொண்டு
கலசமதில்
தானமிழ்த்தித்
தயிலம்
வாங்கி
நேரப்பா
முன்சொன்ன
அஞ்சும்
போட்டு
நிசமானதைலத்தை
விட்டுக்
கிண்டே
.
425
கிண்டிமிகத்
தானெடுத்து
ரவியிற்
போட்டுக்
கிருபையுடன்
பீங்கான்தன்
தாளி
சென்று
அண்டகே
சரிமாது
தன்னைப்
போற்றி
ஆக்கைநிலை
தனையறிந்து
அந்தி
சந்தி
குன்றிமணி
யளவெடுத்துக்
கொண்டாயானால்
குடிலமென்ற
தீவினைகள்காணா
தோடும்
எண்டிசையுங்
கீர்த்தி
பெற
வாழ்வாயப்பா
இன்பரசகாயாதி
கற்பந்தானே
.
426