சௌமிய சாகரம்
90
கண்கண்ட சிவரூபமிதுதானய்யா
கருணைவளர் சாயுச்சிய பதமீதய்யா
விண்கண்ட வெளிப்பூசைசரியை மார்க்கம்
வேதாந்தச்சுளிமுனையில் மேவிப் பாரு
முன்கண்ட காட்சியெல்லாம் அங்கே கண்டேன்
முத்தியுள்ள பிறப்பிறப்பும் அங்கே கண்டேன்
கண்கண்ட ஓங்கார வட்டந்தன்னில்
காணுமடா எட்டுரெண்டும் கருவாய்க் காணே. 336
காணப்பா புலத்தியனே உனக்காய்ச் சொன்னேன்
கருவான எட்டுரெண்டும் நாத விந்து
பேணப்பா நாதவிந்து சத்திசிவ மாச்சு
பெருகிநின்ற சத்திசிவந்தான்தானென்று
பூணப்பா அறிவதனால் மனமே பூண்டு
புத்தியுடன் சத்திசிவ பூசை கேளு
தோணப்பாதனையறிந்து பூசைசெய்யச்
சொல்லுகிறேன் கருமான சூட்சந்தானே! 337
தானான சூட்சமது என்ன வென்றால்
தன்மையுடன் போம்வாய்வு சிவமதாகும்
ஊனான உள்புகுதல் சத்தி யாகும்
உண்மையுடனிதுவறிந்து தன்னைப் பார்த்துக்
கோனான குருபீடம் புருவ மத்திக்
குருவான அனுக்கிரகச்சுளினை மீதில்
வானான கேசரமேதானேதானாய்
மனங்குவிந்து பூசைசெய்யும் வகையைக் கேளே! 338
வகையான பூரகந்தான் அங்கென்றூது
மகஸ்த்தான கும்பகந்தான் சிங்கென்றேத்தில்
துகையான ரேசகந்தான் உங்கென்றய்யா
சுத்தமுடன் யோகசாதனையைக் கேளு
பகையாதே பூரகந்தான் வங்வங் கென்று
பத்தியுடன் தானிருக்க மாத்திரைரெண்டாச்சு
நகையாதே நாலுதிரம் அங்கென்றாக்கால்
நன்மையுள்ள மாத்திரைதான் நாலு மாச்சே! 339
90
கண்கண்ட
சிவரூபமிதுதானய்யா
கருணைவளர்
சாயுச்சிய
பதமீதய்யா
விண்கண்ட
வெளிப்பூசைசரியை
மார்க்கம்
வேதாந்தச்சுளிமுனையில்
மேவிப்
பாரு
முன்கண்ட
காட்சியெல்லாம்
அங்கே
கண்டேன்
முத்தியுள்ள
பிறப்பிறப்பும்
அங்கே
கண்டேன்
கண்கண்ட
ஓங்கார
வட்டந்தன்னில்
காணுமடா
எட்டுரெண்டும்
கருவாய்க்
காணே
.
336
காணப்பா
புலத்தியனே
உனக்காய்ச்
சொன்னேன்
கருவான
எட்டுரெண்டும்
நாத
விந்து
பேணப்பா
நாதவிந்து
சத்திசிவ
மாச்சு
பெருகிநின்ற
சத்திசிவந்தான்தானென்று
பூணப்பா
அறிவதனால்
மனமே
பூண்டு
புத்தியுடன்
சத்திசிவ
பூசை
கேளு
தோணப்பாதனையறிந்து
பூசைசெய்யச்
சொல்லுகிறேன்
கருமான
சூட்சந்தானே
!
337
தானான
சூட்சமது
என்ன
வென்றால்
தன்மையுடன்
போம்வாய்வு
சிவமதாகும்
ஊனான
உள்புகுதல்
சத்தி
யாகும்
உண்மையுடனிதுவறிந்து
தன்னைப்
பார்த்துக்
கோனான
குருபீடம்
புருவ
மத்திக்
குருவான
அனுக்கிரகச்சுளினை
மீதில்
வானான
கேசரமேதானேதானாய்
மனங்குவிந்து
பூசைசெய்யும்
வகையைக்
கேளே
!
338
வகையான
பூரகந்தான்
அங்கென்றூது
மகஸ்த்தான
கும்பகந்தான்
சிங்கென்றேத்தில்
துகையான
ரேசகந்தான்
உங்கென்றய்யா
சுத்தமுடன்
யோகசாதனையைக்
கேளு
பகையாதே
பூரகந்தான்
வங்வங்
கென்று
பத்தியுடன்
தானிருக்க
மாத்திரைரெண்டாச்சு
நகையாதே
நாலுதிரம்
அங்கென்றாக்கால்
நன்மையுள்ள
மாத்திரைதான்
நாலு
மாச்சே
!
339