குமாரசுவாமியம்

34 துருவங்கள் பரணிகுரு குதையாடி கண்முடியாழ் மூலம் பாழ்பனைதார் நாழியடு சுரர்கரும்ப ருக்கன் சுரர்படிரா வாடைகலை தோகைபுற்புள் ளிவைசேர் துரகமுத வாயிரண்டாய்ச் சொல்லொருமா சமுமாய் வருடமுமைப் பசிமுதலாய்க் கதநடப்போ டுபய மானதெழ வர்க்கீய வரன்மாதத் துதையந் தருதினனே ரின்னளவிம் முத்தொகைசொன் மிகிலேழ் தள்ளிதுவென் மாதமிரண் டானதன்ய நாட்கே. 30 (1) சித்திரை மாதத்துக்கு 2, 19; வைகாசிக்கு 2, 21; ஆனிக்கு 7, 21; ஆடிக்கு 6, 19; ஆவணிக்கு 6, 17; புரட்டாசிக்கு 8, 25; ஜப்பசிக்கு 2, 19; கார்த்திகைக்கு 7, 13; மார்கழிக்கு 7, 25; தைக்கு 2, 14; மாசிக்கு 14, 23; பங்குனிக்கு 17, 23 இவைமாதத்துருவம். (2) ஐப்பசி வருடாதியாக நடப்புடனே, கதமுங்கூட்டி, இதனுடனே இரண்டும் கூட்டி, ஏழுக்குக் கொடுக்க வந்த சேடம் வருடத்துருவம். (3) மாதம் பிறந்த வாரம் முதல் ஞாயிறு வரை எண்ணிக்கண்ட தொகைதினத்துருவம். (4) இந்த மூன்று துருவமும் கூட்டிச் சொல்வது தன்னிய நாள். இத்தொகை நாளது மாதாந்திய தேதிக்கு அதிகப்படில், எவ்வேழு தள்ளிச் சொல்லுக. இப்படித் தன்னியநாள் மாதம் இரண்டுதரம் வரும். இவை பகற்காம் என்றவாறு. வாரசூனியம், முகூர்த்தத்திரயம் நாளிறைநேர் முறங்கனலேர் நாழிபுன னமனு நாரிமன்மா லந்தகனு நாவாய்தீ புண்மா வேன்பிதிர்தேட் கடையிரவும் வேய்புனல்பா ரோடம் விதுவும்விது புள்புன்முறம் வெயில்குடந்தே ரும்வேய்
34 துருவங்கள் பரணிகுரு குதையாடி கண்முடியாழ் மூலம் பாழ்பனைதார் நாழியடு சுரர்கரும்ப ருக்கன் சுரர்படிரா வாடைகலை தோகைபுற்புள் ளிவைசேர் துரகமுத வாயிரண்டாய்ச் சொல்லொருமா சமுமாய் வருடமுமைப் பசிமுதலாய்க் கதநடப்போ டுபய மானதெழ வர்க்கீய வரன்மாதத் துதையந் தருதினனே ரின்னளவிம் முத்தொகைசொன் மிகிலேழ் தள்ளிதுவென் மாதமிரண் டானதன்ய நாட்கே . 30 ( 1 ) சித்திரை மாதத்துக்கு 2 19 ; வைகாசிக்கு 2 21 ; ஆனிக்கு 7 21 ; ஆடிக்கு 6 19 ; ஆவணிக்கு 6 17 ; புரட்டாசிக்கு 8 25 ; ஜப்பசிக்கு 2 19 ; கார்த்திகைக்கு 7 13 ; மார்கழிக்கு 7 25 ; தைக்கு 2 14 ; மாசிக்கு 14 23 ; பங்குனிக்கு 17 23 இவைமாதத்துருவம் . ( 2 ) ஐப்பசி வருடாதியாக நடப்புடனே கதமுங்கூட்டி இதனுடனே இரண்டும் கூட்டி ஏழுக்குக் கொடுக்க வந்த சேடம் வருடத்துருவம் . ( 3 ) மாதம் பிறந்த வாரம் முதல் ஞாயிறு வரை எண்ணிக்கண்ட தொகைதினத்துருவம் . ( 4 ) இந்த மூன்று துருவமும் கூட்டிச் சொல்வது தன்னிய நாள் . இத்தொகை நாளது மாதாந்திய தேதிக்கு அதிகப்படில் எவ்வேழு தள்ளிச் சொல்லுக . இப்படித் தன்னியநாள் மாதம் இரண்டுதரம் வரும் . இவை பகற்காம் என்றவாறு . வாரசூனியம் முகூர்த்தத்திரயம் நாளிறைநேர் முறங்கனலேர் நாழிபுன னமனு நாரிமன்மா லந்தகனு நாவாய்தீ புண்மா வேன்பிதிர்தேட் கடையிரவும் வேய்புனல்பா ரோடம் விதுவும்விது புள்புன்முறம் வெயில்குடந்தே ரும்வேய்