குமாரசுவாமியம்

125) ஆயமிசை அவர்கூட வாக்குறக்கட் கோன்பத் தாகவிற்பொன் உ.தயமெனில் ஆரல்வைசே டிகமாய் நாயகனும்சேல் உதயநணப் பவன்பார்த்தி டத்தே நடைமனங்கி சம்உறிலணன்கண் ணாதரொன்றாய்ச் சேர தாய்மனிறை தங்களில்கேந் திரிக்கவுட லரவம் தணணெதிர்க்க இவர்களயி ராபதத்தங் கிசமாய் ஏயிலற மொன்றறல்கண் பவர்நாற்கேந் திரத்தும் எனிலரை ஒன் றொருபதின்மேல் எண்ணிலட்சம் தனமே. 130 பதினொன்று, பத்தாம் இடத்துக்கு உடையவர்கள் கூடி இரண்டில் இருக்க, இதற்குடையன் பத்தில் இருக்க, இலக்கனம் தனுவாகிக் குரு இருக்கில் ஐம்பதாயிரம் பொன் உடையவன். சேய் வைசேடிகாங்கிசம் ஏறி, இலக்கனேச னுடன் கூடி இலக்கனமாகிய மீனத்தில் இருக்க, பதினோராம் இடத்துக்கு உடையவன் பார்க்க, விருச்சிகாங்கிடம் ஏறில் நூறாயிரம் பொன் உடையவன். இரண்டு, பதினோராம் இடங்களுக்கு உடையவர்கள் கூட, நான்கு, ஒன்றுக்கு உடையவர்கள் கேந்திரமாக, ஒன்று, ஏழாம் இடங்களில் குரு, அரவெதிர்க்க, இவர்கள் ஐராவத அங்கிசம் ஏறில் பத்து நூறாயிரம் பொன் உடையவன். ஒன்பது, ஒன்று, நான்கு, இரண்டு, பதினொன்றுக்கு உடையவர்கள் நான்கு கேந்திரங்களிலும் சுபசகிதமாக இருக்கில் கோடிக்கு மேலுள்ள தனவான். தனத்ததிபன் உற்றசுப வர்க்கமதெத் தனையத் தனைக்குமுள கதிர்த்தொகையைத் தனத்தொகைவர் தளையாம் சினத்தரிமன் முதல்வருறல் விழித்தலகம் எனுமுத் திறத்தியல்புக் கமைத்தபடி வரத்தியல்செப் புவரால் அணத்துணவுக் கிவன்புகரம் புலிக்குடைய பெலமும் அபெலமுமுன் போலவிதற் கறிய உரைத் திடுவார் இனித்தன்முதல் ருசித்தல் பொசித் தற்கிவர்கட் குரைத்த இயல்குளதப் பொதியவரை இடத்தகுடத் தவனே. 131 தனாதிபதி எத்தனைசுபவர்க்கம் ஏறினானோ அத்தனை சுபவர்க்கத்துக்கும் எத்தனைக் கதிருண்டோ , அவற்றை
125 ) ஆயமிசை அவர்கூட வாக்குறக்கட் கோன்பத் தாகவிற்பொன் . தயமெனில் ஆரல்வைசே டிகமாய் நாயகனும்சேல் உதயநணப் பவன்பார்த்தி டத்தே நடைமனங்கி சம்உறிலணன்கண் ணாதரொன்றாய்ச் சேர தாய்மனிறை தங்களில்கேந் திரிக்கவுட லரவம் தணணெதிர்க்க இவர்களயி ராபதத்தங் கிசமாய் ஏயிலற மொன்றறல்கண் பவர்நாற்கேந் திரத்தும் எனிலரை ஒன் றொருபதின்மேல் எண்ணிலட்சம் தனமே . 130 பதினொன்று பத்தாம் இடத்துக்கு உடையவர்கள் கூடி இரண்டில் இருக்க இதற்குடையன் பத்தில் இருக்க இலக்கனம் தனுவாகிக் குரு இருக்கில் ஐம்பதாயிரம் பொன் உடையவன் . சேய் வைசேடிகாங்கிசம் ஏறி இலக்கனேச னுடன் கூடி இலக்கனமாகிய மீனத்தில் இருக்க பதினோராம் இடத்துக்கு உடையவன் பார்க்க விருச்சிகாங்கிடம் ஏறில் நூறாயிரம் பொன் உடையவன் . இரண்டு பதினோராம் இடங்களுக்கு உடையவர்கள் கூட நான்கு ஒன்றுக்கு உடையவர்கள் கேந்திரமாக ஒன்று ஏழாம் இடங்களில் குரு அரவெதிர்க்க இவர்கள் ஐராவத அங்கிசம் ஏறில் பத்து நூறாயிரம் பொன் உடையவன் . ஒன்பது ஒன்று நான்கு இரண்டு பதினொன்றுக்கு உடையவர்கள் நான்கு கேந்திரங்களிலும் சுபசகிதமாக இருக்கில் கோடிக்கு மேலுள்ள தனவான் . தனத்ததிபன் உற்றசுப வர்க்கமதெத் தனையத் தனைக்குமுள கதிர்த்தொகையைத் தனத்தொகைவர் தளையாம் சினத்தரிமன் முதல்வருறல் விழித்தலகம் எனுமுத் திறத்தியல்புக் கமைத்தபடி வரத்தியல்செப் புவரால் அணத்துணவுக் கிவன்புகரம் புலிக்குடைய பெலமும் அபெலமுமுன் போலவிதற் கறிய உரைத் திடுவார் இனித்தன்முதல் ருசித்தல் பொசித் தற்கிவர்கட் குரைத்த இயல்குளதப் பொதியவரை இடத்தகுடத் தவனே . 131 தனாதிபதி எத்தனைசுபவர்க்கம் ஏறினானோ அத்தனை சுபவர்க்கத்துக்கும் எத்தனைக் கதிருண்டோ அவற்றை