சௌமிய சாகரம்

40 ஆமடா அந்தநாள் பதின்கோடி மீண்டால் அருமையுள் ரோமரிஷிக் கொருரோம முதிருந் தாமடாரோமமது மூணரையாங் கோடி சதியாக வுதிரும்போதவர்மரண மாவார் நாமடா அந்தநாள் மூவிரட்டியானால் நமபிரம முனிவர்சிவ பூசை வேளை ஓமடா சிவபூசையெழுநூறு மீண்டால் உள்ளமுனி ரிஷிகளுக்கு மொருநாளு மாமே. 148 பிரமவயசு அந்தநாள் யேழாயிரங் கோடி மீண்டால் ஆனதொரு ரிஷிமுனிவர் இறந்து பிறந்திடுவார் இந்தநாள் பதினாயிரங் கோடி மீண்டால் இதமான மரல் தனக்கு ஒருநாளாகும் பந்தமுள்ள கொண்டநாள்முப் பத்தொரு மாதம் பதிவான மாதமீராறு ஒரு வருஷம் சொந்தமுடன் வருசம் அறு பதுக்கு மானால் சுகமாகக் கண்டுகொளாண்டுகளு மாமே. 149 ஆண்டுகளும் ஈரொன்பதாகில்சலப் பிரளையம் ஆனசலப் பிரளைய மெழுநூறு மீண்டால் காண்டயுகப் பிரளையமா மெழுநாறு மீண்டால் கலங்குமகாப் பிரளையமாய் நூறுதிர மீண்டால் தோண்டுமொரு பூதசங்காரமெனலாகும் சுகபூதசங்காரம் ஒருகோடி மீண்டால் தாண்டிவரும் போது வெகு அனந்தசங்கார தருவான சங்காரம் ஒருமூன்று மாமே. 150 விஷ்ணுவயசு ஆமப்பாசங்காரமாகிவருங்காலம் அரிதிருமாலதுவும் ஆலிலைமேற் பள்ளி ஓமென்ற சயனமது ஒரு கோடி மீண்டால் உத்தமனே நாகமதில் நித்திரையு மாவார் தாமென்ற நித்திரையுமுத்திரையு மேலாகித் தன்னொளிவு விண்ணொளிவு சரியாகப் பார்த்து நாமென்று அவனென்று நினையா மல்தான் நாதாந்த பூரணத்திற் பூரணமானாரே. 151
40 ஆமடா அந்தநாள் பதின்கோடி மீண்டால் அருமையுள் ரோமரிஷிக் கொருரோம முதிருந் தாமடாரோமமது மூணரையாங் கோடி சதியாக வுதிரும்போதவர்மரண மாவார் நாமடா அந்தநாள் மூவிரட்டியானால் நமபிரம முனிவர்சிவ பூசை வேளை ஓமடா சிவபூசையெழுநூறு மீண்டால் உள்ளமுனி ரிஷிகளுக்கு மொருநாளு மாமே . 148 பிரமவயசு அந்தநாள் யேழாயிரங் கோடி மீண்டால் ஆனதொரு ரிஷிமுனிவர் இறந்து பிறந்திடுவார் இந்தநாள் பதினாயிரங் கோடி மீண்டால் இதமான மரல் தனக்கு ஒருநாளாகும் பந்தமுள்ள கொண்டநாள்முப் பத்தொரு மாதம் பதிவான மாதமீராறு ஒரு வருஷம் சொந்தமுடன் வருசம் அறு பதுக்கு மானால் சுகமாகக் கண்டுகொளாண்டுகளு மாமே . 149 ஆண்டுகளும் ஈரொன்பதாகில்சலப் பிரளையம் ஆனசலப் பிரளைய மெழுநூறு மீண்டால் காண்டயுகப் பிரளையமா மெழுநாறு மீண்டால் கலங்குமகாப் பிரளையமாய் நூறுதிர மீண்டால் தோண்டுமொரு பூதசங்காரமெனலாகும் சுகபூதசங்காரம் ஒருகோடி மீண்டால் தாண்டிவரும் போது வெகு அனந்தசங்கார தருவான சங்காரம் ஒருமூன்று மாமே . 150 விஷ்ணுவயசு ஆமப்பாசங்காரமாகிவருங்காலம் அரிதிருமாலதுவும் ஆலிலைமேற் பள்ளி ஓமென்ற சயனமது ஒரு கோடி மீண்டால் உத்தமனே நாகமதில் நித்திரையு மாவார் தாமென்ற நித்திரையுமுத்திரையு மேலாகித் தன்னொளிவு விண்ணொளிவு சரியாகப் பார்த்து நாமென்று அவனென்று நினையா மல்தான் நாதாந்த பூரணத்திற் பூரணமானாரே . 151