சௌமிய சாகரம்
306
சிகாரமென்ற அக்கினியை மூட்டிக் கொண்டு
சிவசிவா சுழுமுனையில் வாசி யேத்தி
வகாரமென்ற வாசிதனைத் திறவாள் சத்தி
வரிசையுடன் சத்தியெட்டும் மவுன மாவாள்
மகாரமென்ற மவுனியவள் ஓங்காரத் துள்ளே
வகையறிந்து ரவிமதியும் வாசமாகி
அகாரமென்ற மனோன்மணியைப் பூசை பண்ண
அனுதினமுஞ் சுழுமுனையை யறிந்து நோக்கே.1157
நோக்குவது சுழுமுனைக்குள் மனது வைத்து
நுண்மையுடன் அண்ணாக்கை யுண்ணாக் குள்ளே
தாக்குவது ரவிமதியை யொன்றாய்க் கூட்டித்
தமரான அனுவாசல் தமரி லேதான்
வாக்குமன தொன்றாகி மனது கூர்ந்து
வரிசையுடன் ரேசகபூரகமும் பண்ணி
நாக்குநுனியமுர்தத்தை நாவில் கொண்டு
நன்மையுடன் கும்பகத்தில் நாடி நில்லே. 1158
நில்லென்ற நிலையான மூல சக்தி
நிசமான ஓங்காரந் தன்னில் மைந்தா
சொல்லென்ற சுழுனைவளி தன்னி லேறிச்
சுகமாக மேலாறுஞ்சுத்திப் பார்த்து
உள்ளென்ற சிகாரமதாலுற்றுப் பார்த்து
உற்றுமெல்லப் பார்க்கையிலே நந்தி காணுஞ்
செல்லென்ற அகாரமதாலறிவுங்காணுஞ்
சேர்ந்துமிக ஒன்றாகி ஒளிபோலாமே. 1159
ஒளியான வொளியறிந்து உற்றுப் பாரு
உற்றுமெல்லப் பார்க்கையிலே நந்தி காணும்
விளியான தெளிவறிந்து கண்டாயானால்
வேதாந்த மூலமதிற் கனலோ மீறும்
சுளியான கண்ணறிந்து வளியே சென்றால்
சோதிதிருவானகேசரியாள் பாதம்
வளியானதுறையறிந்து கண்டாயானால்
மகஸ்த்தான மதிரவியின் காலைத் தேடே... 1160
306
சிகாரமென்ற
அக்கினியை
மூட்டிக்
கொண்டு
சிவசிவா
சுழுமுனையில்
வாசி
யேத்தி
வகாரமென்ற
வாசிதனைத்
திறவாள்
சத்தி
வரிசையுடன்
சத்தியெட்டும்
மவுன
மாவாள்
மகாரமென்ற
மவுனியவள்
ஓங்காரத்
துள்ளே
வகையறிந்து
ரவிமதியும்
வாசமாகி
அகாரமென்ற
மனோன்மணியைப்
பூசை
பண்ண
அனுதினமுஞ்
சுழுமுனையை
யறிந்து
நோக்கே
.
1157
நோக்குவது
சுழுமுனைக்குள்
மனது
வைத்து
நுண்மையுடன்
அண்ணாக்கை
யுண்ணாக்
குள்ளே
தாக்குவது
ரவிமதியை
யொன்றாய்க்
கூட்டித்
தமரான
அனுவாசல்
தமரி
லேதான்
வாக்குமன
தொன்றாகி
மனது
கூர்ந்து
வரிசையுடன்
ரேசகபூரகமும்
பண்ணி
நாக்குநுனியமுர்தத்தை
நாவில்
கொண்டு
நன்மையுடன்
கும்பகத்தில்
நாடி
நில்லே
.
1158
நில்லென்ற
நிலையான
மூல
சக்தி
நிசமான
ஓங்காரந்
தன்னில்
மைந்தா
சொல்லென்ற
சுழுனைவளி
தன்னி
லேறிச்
சுகமாக
மேலாறுஞ்சுத்திப்
பார்த்து
உள்ளென்ற
சிகாரமதாலுற்றுப்
பார்த்து
உற்றுமெல்லப்
பார்க்கையிலே
நந்தி
காணுஞ்
செல்லென்ற
அகாரமதாலறிவுங்காணுஞ்
சேர்ந்துமிக
ஒன்றாகி
ஒளிபோலாமே
.
1159
ஒளியான
வொளியறிந்து
உற்றுப்
பாரு
உற்றுமெல்லப்
பார்க்கையிலே
நந்தி
காணும்
விளியான
தெளிவறிந்து
கண்டாயானால்
வேதாந்த
மூலமதிற்
கனலோ
மீறும்
சுளியான
கண்ணறிந்து
வளியே
சென்றால்
சோதிதிருவானகேசரியாள்
பாதம்
வளியானதுறையறிந்து
கண்டாயானால்
மகஸ்த்தான
மதிரவியின்
காலைத்
தேடே
.
.
.
1160