சௌமிய சாகரம்
271
காணவே அரூபமென்ற தெரிசனந்தானொன்று
கயிலாச சாயுச்சிய தெரிசனந்தானொன்று
தோணவே தெரிசனங்கள் பதினாறு தன்னைச்
சுத்தமுடன் சற்குருவின் கடாட்சத்தாலே
ஊணவே யந்தநிலை யூணிப் பார்த்து
உண்மையுடன் தன்னிலையில் தன்னைக் கண்டு
பூணவே யிகபரசாதனத்துக் கெல்லாம்
பொருந்திமனம் பூரணமாய் வாழ்வாய் பாரே. 1024
பாரப்பா தெரிசனங்கள் பதினாறு தன்னைப்
பத்தியுடன் தன்னகமாய்ப் பதிவாய்க்காண
நேரப்பா சொல்லுகிறேன் மூலாதாரம்
நேர்மையுள்ள தன்னறிவாய் நிலையைக் காணச்
சாரப்பா ஆதாரமேலாதாரம்
சகலகலை வாசமடா மூலாதாரம்
காரப்பா அடிமூலாதாரத்துள்ளே
கருணையுடன் ஓமென்று இங்கென் றூணே. 1025
ஊணவே வாசிதனை மூலந்தன்னில்
ஓமென்ற தானிருத்தி யுறுதி கொண்டு
பேணவே யிங்கென்று மவுனம் பூட்டிப்
பெருமையுடன் ஓம் அங் சிவாயநம வென்று
தோணவே தினம்நூறு உரூவே செய்தால்
சுத்தமுள்ள சுழுனையிலே நந்தி காணும்
பூணவே நந்திபிரகாசங் கண்டால்
பொருந்தி நின்ற ஆதாரஞ்சித்தி யாமே. 1026
ஆமப்பா ஆதாரஞ்சித்தி யானால்
ஆதாரதேவதைகளப்போகாணும்
ஓமப்பா என்ற பிரணவத்தினாலே
ஒளிவிளக்காய் நின்றதொரு சோதி காணும்
வாமப்பாநிறைந்த பூரணத்தினாலே
மகத்தான சோதி பஞ்சவர்ண மாகத்
தாமப்பாதன்னிலையிற்றானே காணும்
தன்மையுடன் கண்டதெல்லாஞ் சித்தி யாமே. 1027
271
காணவே
அரூபமென்ற
தெரிசனந்தானொன்று
கயிலாச
சாயுச்சிய
தெரிசனந்தானொன்று
தோணவே
தெரிசனங்கள்
பதினாறு
தன்னைச்
சுத்தமுடன்
சற்குருவின்
கடாட்சத்தாலே
ஊணவே
யந்தநிலை
யூணிப்
பார்த்து
உண்மையுடன்
தன்னிலையில்
தன்னைக்
கண்டு
பூணவே
யிகபரசாதனத்துக்
கெல்லாம்
பொருந்திமனம்
பூரணமாய்
வாழ்வாய்
பாரே
.
1024
பாரப்பா
தெரிசனங்கள்
பதினாறு
தன்னைப்
பத்தியுடன்
தன்னகமாய்ப்
பதிவாய்க்காண
நேரப்பா
சொல்லுகிறேன்
மூலாதாரம்
நேர்மையுள்ள
தன்னறிவாய்
நிலையைக்
காணச்
சாரப்பா
ஆதாரமேலாதாரம்
சகலகலை
வாசமடா
மூலாதாரம்
காரப்பா
அடிமூலாதாரத்துள்ளே
கருணையுடன்
ஓமென்று
இங்கென்
றூணே
.
1025
ஊணவே
வாசிதனை
மூலந்தன்னில்
ஓமென்ற
தானிருத்தி
யுறுதி
கொண்டு
பேணவே
யிங்கென்று
மவுனம்
பூட்டிப்
பெருமையுடன்
ஓம்
அங்
சிவாயநம
வென்று
தோணவே
தினம்நூறு
உரூவே
செய்தால்
சுத்தமுள்ள
சுழுனையிலே
நந்தி
காணும்
பூணவே
நந்திபிரகாசங்
கண்டால்
பொருந்தி
நின்ற
ஆதாரஞ்சித்தி
யாமே
.
1026
ஆமப்பா
ஆதாரஞ்சித்தி
யானால்
ஆதாரதேவதைகளப்போகாணும்
ஓமப்பா
என்ற
பிரணவத்தினாலே
ஒளிவிளக்காய்
நின்றதொரு
சோதி
காணும்
வாமப்பாநிறைந்த
பூரணத்தினாலே
மகத்தான
சோதி
பஞ்சவர்ண
மாகத்
தாமப்பாதன்னிலையிற்றானே
காணும்
தன்மையுடன்
கண்டதெல்லாஞ்
சித்தி
யாமே
.
1027