சௌமிய சாகரம்
ஐம்புலன்
பார்க்கவே ஐம்புலனை நன்றாய்க் கேளு
பரிவான சத்தமொடு பரிச ரூபம்
ஏற்கவே ரசமுடனே கெந்த மஞ்சு
மின்பமுள்ள ஐம்புலனென் றிதற்கும் பேரு
சேர்க்கையுடன் ஐம்புலனைக் கண்டு மைந்தா
தேர்ந்து மனதறிவாலே தெளிந்து கொண்டால்
மார்க்கமுள்ள சித்தனென்று யார்க்குந் தோணும்
மைந்தனே ஐம்புலனை வகுத்துக் கேளே! 30
காணவே ஐம்புலனை வகுத்துப் பார்த்துக்
கருவான ஆதார மூலத் தேகி
தோணவே வாசியுட நிலையைக் கண்டு
சுத்தமுடன் வாசி தன்னி லேறிப்
பூணவே அண்டவரைதன்னில் சென்று
புத்தியுடன் சுத்தமதாய் நின்றாயானால்
ஊணவேகா ரணமந்தக்கரணம் நாலும்
உண்மையுடன் சொல்லுகிறே னுகந்து கேளே! 31
அந்தக்கரணம்
கேளடா புலத்தியமா ரிஷியே அய்யா
கிருபையுள்ளகரணமந்தக் கரணந்தன்னைக்
கோளடா இல்லாத மனந்தானென்று
கூர்மையுடனின்றிலங்கும் புத்தி யொன்று
கேளடாஆங்கார மான தொன்று
சிவசிவாசுத்தமென்ற சித்த மொன்று
ஆளடாகரணமென்ற கரணம் நான்கு
மப்பனே யறிந்துகொண்டு ஆற்றும் பாரே! 32
ஐம்புலன்
பார்க்கவே
ஐம்புலனை
நன்றாய்க்
கேளு
பரிவான
சத்தமொடு
பரிச
ரூபம்
ஏற்கவே
ரசமுடனே
கெந்த
மஞ்சு
மின்பமுள்ள
ஐம்புலனென்
றிதற்கும்
பேரு
சேர்க்கையுடன்
ஐம்புலனைக்
கண்டு
மைந்தா
தேர்ந்து
மனதறிவாலே
தெளிந்து
கொண்டால்
மார்க்கமுள்ள
சித்தனென்று
யார்க்குந்
தோணும்
மைந்தனே
ஐம்புலனை
வகுத்துக்
கேளே
!
30
காணவே
ஐம்புலனை
வகுத்துப்
பார்த்துக்
கருவான
ஆதார
மூலத்
தேகி
தோணவே
வாசியுட
நிலையைக்
கண்டு
சுத்தமுடன்
வாசி
தன்னி
லேறிப்
பூணவே
அண்டவரைதன்னில்
சென்று
புத்தியுடன்
சுத்தமதாய்
நின்றாயானால்
ஊணவேகா
ரணமந்தக்கரணம்
நாலும்
உண்மையுடன்
சொல்லுகிறே
னுகந்து
கேளே
!
31
அந்தக்கரணம்
கேளடா
புலத்தியமா
ரிஷியே
அய்யா
கிருபையுள்ளகரணமந்தக்
கரணந்தன்னைக்
கோளடா
இல்லாத
மனந்தானென்று
கூர்மையுடனின்றிலங்கும்
புத்தி
யொன்று
கேளடாஆங்கார
மான
தொன்று
சிவசிவாசுத்தமென்ற
சித்த
மொன்று
ஆளடாகரணமென்ற
கரணம்
நான்கு
மப்பனே
யறிந்துகொண்டு
ஆற்றும்
பாரே
!
32