சௌமிய சாகரம்

230 வங்கசுண்ணம் சோமானம் வையப்பாரவிதனிலே நன்றாய்க் காய்ந்தால் மார்க்கமுடன் மண்சீலை வலுவாய்ச் செய்து மெய்யப்பா காட்டெருவில் புடமே செய்ய வேகமுள்ள சாரமது கட்டு மப்பா பொய்யப்பா போகாது சாரக்கட்டு புத்தியுடன் கண்மணியே நன்றாய்ப் பாரு செய்யப்பாகைபாகத்தாலே பார்த்தால் தீர்க்கமுள்ள வீரத்தின் கட்டுக் கேளே. 875 வீரக்கட்டு கட்டான வீரமதின் கட்டைக் கேளு கருவான வீரமுடன் துருசு சேர்த்து மட்டாக வங்கபற்பங்காலே கூட்டி மார்க்கமுடன் கல்வமதில் வைத்து மைந்தா மட்டான மதியமூர்த்தந்தன்னாலாட்டி மார்க்கமுடன் வழித்துருட்டி ரவியில் போடு திட்டமுடன் காட்டெருவில் புடத்தைப் போட்டால் சிவசிவாவீரமது கட்டுங் காணே. 876 காணப்பாசாரமுடன் வீரம் ரெண்டும் கைமுறையாயமுர்தரசத்தாலே கட்டிப் பூணப்பா பாணிதனில் பதனம் பண்ணிப் புத்தியுடன் இன்னமொரு கருவைக் கேளு பேணப்பா நாகமதைக் குகையிலிட்டுப் பெருமையுடன் தானுருகும் போதி லேதான் தோணப்பாசாரமுடன் வீரம் ரெண்டும் சுத்தமுடன் பத்துக்கு ஒன்று சேரே. 877
230 வங்கசுண்ணம் சோமானம் வையப்பாரவிதனிலே நன்றாய்க் காய்ந்தால் மார்க்கமுடன் மண்சீலை வலுவாய்ச் செய்து மெய்யப்பா காட்டெருவில் புடமே செய்ய வேகமுள்ள சாரமது கட்டு மப்பா பொய்யப்பா போகாது சாரக்கட்டு புத்தியுடன் கண்மணியே நன்றாய்ப் பாரு செய்யப்பாகைபாகத்தாலே பார்த்தால் தீர்க்கமுள்ள வீரத்தின் கட்டுக் கேளே . 875 வீரக்கட்டு கட்டான வீரமதின் கட்டைக் கேளு கருவான வீரமுடன் துருசு சேர்த்து மட்டாக வங்கபற்பங்காலே கூட்டி மார்க்கமுடன் கல்வமதில் வைத்து மைந்தா மட்டான மதியமூர்த்தந்தன்னாலாட்டி மார்க்கமுடன் வழித்துருட்டி ரவியில் போடு திட்டமுடன் காட்டெருவில் புடத்தைப் போட்டால் சிவசிவாவீரமது கட்டுங் காணே . 876 காணப்பாசாரமுடன் வீரம் ரெண்டும் கைமுறையாயமுர்தரசத்தாலே கட்டிப் பூணப்பா பாணிதனில் பதனம் பண்ணிப் புத்தியுடன் இன்னமொரு கருவைக் கேளு பேணப்பா நாகமதைக் குகையிலிட்டுப் பெருமையுடன் தானுருகும் போதி லேதான் தோணப்பாசாரமுடன் வீரம் ரெண்டும் சுத்தமுடன் பத்துக்கு ஒன்று சேரே . 877