சௌமிய சாகரம்

தானான சவுமியசாகரத்தை நன்றாய்த் தன்மையுடனாதியந்தந்தயவாய்ப் பார்த்துத் தேனான வடமொழியைத் தமிழ்தான் செய்த திறமான கருவிபரம் நன்றாய்ச் சொன்னீர் ஊனான வுலகமதில் உலகோர்கண்டால் உறுதியுள்ள கயிலாச மிடங்கொள்ளாது மானாகேள் சவுமியசாகரத்தை நீயும் மார்க்கமுடன் அந்திசந்தி மகிழ்ந்து பாரே! 8 பாரென்று சொன்னமொழி பெற்றுக்கொண்டு பதிவான பொதிகைதனில் வாசமாகி நேரென்று சவுமியசாகரத்தைப் பார்த்து நிட்செயமாயஷ்டாங்க யோகம் பார்க்கில் சாரென்ற பொதிகைமலைச்சார்ப்புக் குள்ளே சார்ந்திருந்த தபோதனர்கள் தானே கூடி மேரென்ற பொதிகைதனில் முடிமேற் சென்று மெய்ஞான சற்குருவென்றடிபணிந்தார். 9 பணிந்துமிக அனைவோரு மிருகை கூப்பிப் பரமகுரு தேசிகரேபதிவாய் நீருங் கனிந்துமிக அந்தமதில் கருணையாகக் கடாட்சித்த சவுமியசாகரத்தை நாங்கள் அணிந்து அதின் தெரிசினங்கள் பார்ப்போமென்று அனைவோரும் ஒருமனதாய் அருள்கண் கூர்ந்து துணிந்துவந்தோம் உம்முடைய பாதந் தன்னில் சுகமாக அடுமைபடைத்தாளென் ரோரே! 10 ஆளென்று சொன்னதபோதனரைப் பார்த்து ஆதிதொடுத் தந்தவரை சொன்ன நூலில் காலென்ற கருக்குருவும் நன்றாய்ச் சொன்னோங் காசியினில் தபோதனர்கள் கருணை யாக வானென்று சொன்னதொரு தீட்சை மாற்கம் வளமான சவுக்கார வழலைப் போக்கு மேலென்ற கற்பத்தி லாறு லட்சம் விண்டதிலே சூட்சமதாய்க் கண்டேன் பாரே! 11
தானான சவுமியசாகரத்தை நன்றாய்த் தன்மையுடனாதியந்தந்தயவாய்ப் பார்த்துத் தேனான வடமொழியைத் தமிழ்தான் செய்த திறமான கருவிபரம் நன்றாய்ச் சொன்னீர் ஊனான வுலகமதில் உலகோர்கண்டால் உறுதியுள்ள கயிலாச மிடங்கொள்ளாது மானாகேள் சவுமியசாகரத்தை நீயும் மார்க்கமுடன் அந்திசந்தி மகிழ்ந்து பாரே ! 8 பாரென்று சொன்னமொழி பெற்றுக்கொண்டு பதிவான பொதிகைதனில் வாசமாகி நேரென்று சவுமியசாகரத்தைப் பார்த்து நிட்செயமாயஷ்டாங்க யோகம் பார்க்கில் சாரென்ற பொதிகைமலைச்சார்ப்புக் குள்ளே சார்ந்திருந்த தபோதனர்கள் தானே கூடி மேரென்ற பொதிகைதனில் முடிமேற் சென்று மெய்ஞான சற்குருவென்றடிபணிந்தார் . 9 பணிந்துமிக அனைவோரு மிருகை கூப்பிப் பரமகுரு தேசிகரேபதிவாய் நீருங் கனிந்துமிக அந்தமதில் கருணையாகக் கடாட்சித்த சவுமியசாகரத்தை நாங்கள் அணிந்து அதின் தெரிசினங்கள் பார்ப்போமென்று அனைவோரும் ஒருமனதாய் அருள்கண் கூர்ந்து துணிந்துவந்தோம் உம்முடைய பாதந் தன்னில் சுகமாக அடுமைபடைத்தாளென் ரோரே ! 10 ஆளென்று சொன்னதபோதனரைப் பார்த்து ஆதிதொடுத் தந்தவரை சொன்ன நூலில் காலென்ற கருக்குருவும் நன்றாய்ச் சொன்னோங் காசியினில் தபோதனர்கள் கருணை யாக வானென்று சொன்னதொரு தீட்சை மாற்கம் வளமான சவுக்கார வழலைப் போக்கு மேலென்ற கற்பத்தி லாறு லட்சம் விண்டதிலே சூட்சமதாய்க் கண்டேன் பாரே ! 11