சௌமிய சாகரம்

103 காணப்பாபூரணமாயண்டச் சத்துக் கண்டவர்கள் விண்டதில்லை கல்பாசாணம் ஊணப்பா உறுதியுள்ள கல்பாசாணம் உண்மையுள்ள வீரமடாலிங்கந்தாரம் பூணப்பாபிருதிவியும் அப்புஞ் சேர்த்துப் புத்தியுடனாறுமொன்றாய்க்கல்வத் திட்டுத் தோணப்பா மூன்றுசுண்ணம் செய்நீராலே சுத்தமுடன்தானரைத்துச் சுத்தி பண்ணே ! சுத்திபண்ணும் வகையதுவைச் சொல்லக் கேளு சுகமாகத் தானரைத்து வட்டுப் பண்ணிப் பத்தியுடன் சட்டிநடு வைத்துச் சாம்பல் பதித்துமிகத் தீயெரித்துப் பதத்தைப்பாரு சித்தியுடன் அனலெழுப்பிக் கட்டிப் போகுந் தீர்க்கமுடன் தானெடுத்துச் செப்பக் கேளு புத்தியுடன் செம்பிலரை வாசி தாக்கிப் பூரணமாய் வெள்ளியிலே பூட்டிப் பாரே ஐ பார்க்கவெள்ளிதங்கமய மாகிப் போச்சு பரஞான கேசரியின் வாசத்தாலே ஏற்கையுடன் சிவயோகந்தங்கிப் போச்சு ஏகாந்த அஷ்டகர்மம் சித்தி யாச்சு சேர்க்கையுடன் ஆதார மூல பீடம் திருவான பீடமதைத் தியானம் பண்ணித் தீர்க்கமுடன் நீயிருந்து வாசி யேறிச் செகதீய மான செயல்தான்தானாச்சே. தானான ஆதார சுரூபந்தன்னைச் சங்கையுடன் தானறிந்து தியானஞ் செய்யத் தேனான புலத்தியனே சொல்லக்கேளு தேகசத்தி உயிர்சிவமாய்த் தெளிந்து கொள்ளு வானானலாடமதில் மனக்கண் வைத்து மனங்கனிய ஒம், றீங், அம், மென்றாக்கால் கோனான ஆதார பூசைதானுங் கோடான கோடி செய்த பலனுக் கொப்பே. 30
103 காணப்பாபூரணமாயண்டச் சத்துக் கண்டவர்கள் விண்டதில்லை கல்பாசாணம் ஊணப்பா உறுதியுள்ள கல்பாசாணம் உண்மையுள்ள வீரமடாலிங்கந்தாரம் பூணப்பாபிருதிவியும் அப்புஞ் சேர்த்துப் புத்தியுடனாறுமொன்றாய்க்கல்வத் திட்டுத் தோணப்பா மூன்றுசுண்ணம் செய்நீராலே சுத்தமுடன்தானரைத்துச் சுத்தி பண்ணே ! சுத்திபண்ணும் வகையதுவைச் சொல்லக் கேளு சுகமாகத் தானரைத்து வட்டுப் பண்ணிப் பத்தியுடன் சட்டிநடு வைத்துச் சாம்பல் பதித்துமிகத் தீயெரித்துப் பதத்தைப்பாரு சித்தியுடன் அனலெழுப்பிக் கட்டிப் போகுந் தீர்க்கமுடன் தானெடுத்துச் செப்பக் கேளு புத்தியுடன் செம்பிலரை வாசி தாக்கிப் பூரணமாய் வெள்ளியிலே பூட்டிப் பாரே பார்க்கவெள்ளிதங்கமய மாகிப் போச்சு பரஞான கேசரியின் வாசத்தாலே ஏற்கையுடன் சிவயோகந்தங்கிப் போச்சு ஏகாந்த அஷ்டகர்மம் சித்தி யாச்சு சேர்க்கையுடன் ஆதார மூல பீடம் திருவான பீடமதைத் தியானம் பண்ணித் தீர்க்கமுடன் நீயிருந்து வாசி யேறிச் செகதீய மான செயல்தான்தானாச்சே . தானான ஆதார சுரூபந்தன்னைச் சங்கையுடன் தானறிந்து தியானஞ் செய்யத் தேனான புலத்தியனே சொல்லக்கேளு தேகசத்தி உயிர்சிவமாய்த் தெளிந்து கொள்ளு வானானலாடமதில் மனக்கண் வைத்து மனங்கனிய ஒம் றீங் அம் மென்றாக்கால் கோனான ஆதார பூசைதானுங் கோடான கோடி செய்த பலனுக் கொப்பே . 30