குமாரசுவாமியம்

264 நளிர்கலைமால் புகரில்கய லக்கனம்ஈர் நான்கில் அனரெனினும் உறலறநிர் மலமாய்ச்சேய் நாட்கோள் முளரிமன்சுன் நிறைபெண்விப கர்சூத்திர ருக்கலதா மூன்றோரைந் தாண்டுதித்த வர்க்காஞ்சவன முகூர்த்தமுமே. சவன முகூர்த்தம் அறியும்படி : உத்திரம் முதல் நான்கும், உத்திரட்டாதி முதல் மூன்றும், உரோகணி, மிருகசீர்ஷம், பூசம், புனர்பூசம் இந்த நாட்களில் அனற்சிகை, விசாகாதி, பஞ்சமி, அமரபட்சம், கல்யாணம் பண்ணின வருடம், கர்ப்பம் உள்ள வருடம், தட்சணாயனம், சூனிய மாதம் இவை முதலானவை நீக்கிக் கடகம், மகரம், மிதுனம், கன்னி, இடபம், துலாம், மீனம் இந்த இலக்கனங்களில் அட்டம சுத்தி உண்டாக ஆயுள்கர்மம் செய்விப்பது உத்தமம். இதற்கு அரசர்குச் செவ்வாயும், மாதர்க்குத் திங்களும், பிராமணர்களுக்கு ஞாயிறும், சூத்திரர்களுக்குச்சனியும் ஆகாத வாரம் என்க. பிறந்த பிள்ளைக்கு மூன்றாம் வருடம் ஐந்தாம் வருடம் சவனத்துக்காகும். அத்தமயன் கோள்மால்புள் ஆதிரைவேய் தாரீ தனுடமுடை யான்மாவைந் தாம்வருடத் தயனம் உத்தரமாய்ச் சனிசேய்விட் டுளவாரம் திதிமற் றுஞ்சுபமா யைந்திரண்டொன் றுடையவர்மால் பலமாய் வித்தைசொலல் பரிதேர்மற் றாயுதமுத் தமிழ்கால் வேதமறஞ் சாத்திரமாம் வெயில்குளம்யாழ் வேய்செக் கித்துவர்வாய் மால்சுடரீ ததற்கதற்குத் தம்மாம் என்பரிதன் மேலுஉப நயனம் இயம் புவதே. 352 வித்தை ஆரம்பத்திற்கு முகூர்த்தம் அறியும்படி : அத்தம், உரோகிணி, உத்திரட்டாதி, திருவோணம், அவிட்டம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ரேவதி, அனுஷம், சித்திரை, உத்திரம், அசுபதி இந்த நாட்களில் ஐந்தாம் வருடத்தில் உத்திராயணத்தில் சனி, சேய் அல்லாத வாரத்தில் திதி, யோகம், கரணமும் சுபமாக; ஒன்று, இரண்டு, ஐந்தாமிடத்திற்கு உடையவர்களும், புதனும் பெலமாகில் வித்தை ஆரம்பத்துக்காம் என்க. இதற்கு அசுபதி குதிரை
264 நளிர்கலைமால் புகரில்கய லக்கனம்ஈர் நான்கில் அனரெனினும் உறலறநிர் மலமாய்ச்சேய் நாட்கோள் முளரிமன்சுன் நிறைபெண்விப கர்சூத்திர ருக்கலதா மூன்றோரைந் தாண்டுதித்த வர்க்காஞ்சவன முகூர்த்தமுமே . சவன முகூர்த்தம் அறியும்படி : உத்திரம் முதல் நான்கும் உத்திரட்டாதி முதல் மூன்றும் உரோகணி மிருகசீர்ஷம் பூசம் புனர்பூசம் இந்த நாட்களில் அனற்சிகை விசாகாதி பஞ்சமி அமரபட்சம் கல்யாணம் பண்ணின வருடம் கர்ப்பம் உள்ள வருடம் தட்சணாயனம் சூனிய மாதம் இவை முதலானவை நீக்கிக் கடகம் மகரம் மிதுனம் கன்னி இடபம் துலாம் மீனம் இந்த இலக்கனங்களில் அட்டம சுத்தி உண்டாக ஆயுள்கர்மம் செய்விப்பது உத்தமம் . இதற்கு அரசர்குச் செவ்வாயும் மாதர்க்குத் திங்களும் பிராமணர்களுக்கு ஞாயிறும் சூத்திரர்களுக்குச்சனியும் ஆகாத வாரம் என்க . பிறந்த பிள்ளைக்கு மூன்றாம் வருடம் ஐந்தாம் வருடம் சவனத்துக்காகும் . அத்தமயன் கோள்மால்புள் ஆதிரைவேய் தாரீ தனுடமுடை யான்மாவைந் தாம்வருடத் தயனம் உத்தரமாய்ச் சனிசேய்விட் டுளவாரம் திதிமற் றுஞ்சுபமா யைந்திரண்டொன் றுடையவர்மால் பலமாய் வித்தைசொலல் பரிதேர்மற் றாயுதமுத் தமிழ்கால் வேதமறஞ் சாத்திரமாம் வெயில்குளம்யாழ் வேய்செக் கித்துவர்வாய் மால்சுடரீ ததற்கதற்குத் தம்மாம் என்பரிதன் மேலுஉப நயனம் இயம் புவதே . 352 வித்தை ஆரம்பத்திற்கு முகூர்த்தம் அறியும்படி : அத்தம் உரோகிணி உத்திரட்டாதி திருவோணம் அவிட்டம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ரேவதி அனுஷம் சித்திரை உத்திரம் அசுபதி இந்த நாட்களில் ஐந்தாம் வருடத்தில் உத்திராயணத்தில் சனி சேய் அல்லாத வாரத்தில் திதி யோகம் கரணமும் சுபமாக ; ஒன்று இரண்டு ஐந்தாமிடத்திற்கு உடையவர்களும் புதனும் பெலமாகில் வித்தை ஆரம்பத்துக்காம் என்க . இதற்கு அசுபதி குதிரை