போகர் கற்பம் 300
போகர் கற்பம் 300.
'. It
சீலைசெய்து வாலுகையின் மேலே வைத்துச்
சிறந்திட்ட பாத்திரத்தில் சூதம் விட்டு
காலை செய்து கருமத்தஞ் சாருவிட்டுக்
கலந்ததெரிப்பாய் நால்சாமங் கமலத்தியால்
வேலை செய்த வெண்ணெய் போல் குலைந்து போகும்
மிக்காக வழித்தெடுத்துத் தண்ணீரில் போடு
ஆலை செய்து ஆரையிலை கவசங்கட்டி
அடுக்காகப் பதினைந்து புடந்தான் போடே. (256)
புடம்போடு பிராயினிலை கவசங்கட்டிப்
புகழாகப் பதினைந்து புடமும் போடு
திடம்போடு செந்திராய் கவசங்கட்டித்
திறமாகப் பதினைந்து புடமுமானால்
அடம்போடு குளிகையுமா மதற்குள் கேளு
அபினோடு கஞ்சாவுஞ் சாதிக்காயும்
முடம்போடு பத்திரியுங் கிராம்புனாபி
முத்தியதோர் மதன்வித்து தோங்காய்தானே. (257)
தோங்காயுங் கசகசா சாரப்பருப்புஞ்
சிறப்பான மருள்மத்து யெட்டிவித்து
தாங்காயு மிதையெல்லா மிடித்து நையச்
சாராயம் விட்டரைத்துச் சாமந்தானும்
வாங்காயுங் குளிகைக்குக் கவசங்கட்டி
மார்க்கமாம் புகை போக்கில் கட்டிவைத்து
நாங்காயு மண்டலந்தான் கழித்தபின்பு
ரவியிலே போட்டிடுவாய் தினந்தான் பத்தே. (258)
தினம்பத்துக் கழித்த பின்பு வாயிலிட்டால்
ஸ்திரீகளுக்குத் தம்பனமாஞ் சுருக்குமெத்த
இனம் நூற்றி யெட்டுமணி தாவடமாய்க்கோர்த்து
யியல்பான ஐந்தெழுந்து ஆரெழுத்து மோத
மனம்பார்த்துத் தேவியொடு சிவன் தான் வந்து -
மகத்தான யோகசித்தி காயசித்தியீவார்
தனம்பார்த்து வாதமுதல் சித்தியாகும் --
சாங்கமாய் மனமுரைத்தால் சித்தியாமே -
(259)
போகர்
கற்பம்
300
.
'
.
It
சீலைசெய்து
வாலுகையின்
மேலே
வைத்துச்
சிறந்திட்ட
பாத்திரத்தில்
சூதம்
விட்டு
காலை
செய்து
கருமத்தஞ்
சாருவிட்டுக்
கலந்ததெரிப்பாய்
நால்சாமங்
கமலத்தியால்
வேலை
செய்த
வெண்ணெய்
போல்
குலைந்து
போகும்
மிக்காக
வழித்தெடுத்துத்
தண்ணீரில்
போடு
ஆலை
செய்து
ஆரையிலை
கவசங்கட்டி
அடுக்காகப்
பதினைந்து
புடந்தான்
போடே
.
(
256
)
புடம்போடு
பிராயினிலை
கவசங்கட்டிப்
புகழாகப்
பதினைந்து
புடமும்
போடு
திடம்போடு
செந்திராய்
கவசங்கட்டித்
திறமாகப்
பதினைந்து
புடமுமானால்
அடம்போடு
குளிகையுமா
மதற்குள்
கேளு
அபினோடு
கஞ்சாவுஞ்
சாதிக்காயும்
முடம்போடு
பத்திரியுங்
கிராம்புனாபி
முத்தியதோர்
மதன்வித்து
தோங்காய்தானே
.
(
257
)
தோங்காயுங்
கசகசா
சாரப்பருப்புஞ்
சிறப்பான
மருள்மத்து
யெட்டிவித்து
தாங்காயு
மிதையெல்லா
மிடித்து
நையச்
சாராயம்
விட்டரைத்துச்
சாமந்தானும்
வாங்காயுங்
குளிகைக்குக்
கவசங்கட்டி
மார்க்கமாம்
புகை
போக்கில்
கட்டிவைத்து
நாங்காயு
மண்டலந்தான்
கழித்தபின்பு
ரவியிலே
போட்டிடுவாய்
தினந்தான்
பத்தே
.
(
258
)
தினம்பத்துக்
கழித்த
பின்பு
வாயிலிட்டால்
ஸ்திரீகளுக்குத்
தம்பனமாஞ்
சுருக்குமெத்த
இனம்
நூற்றி
யெட்டுமணி
தாவடமாய்க்கோர்த்து
யியல்பான
ஐந்தெழுந்து
ஆரெழுத்து
மோத
மனம்பார்த்துத்
தேவியொடு
சிவன்
தான்
வந்து
-
மகத்தான
யோகசித்தி
காயசித்தியீவார்
தனம்பார்த்து
வாதமுதல்
சித்தியாகும்
-
-
சாங்கமாய்
மனமுரைத்தால்
சித்தியாமே
-
(
259
)